IND vs ENG : காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியை தவறவிடும் நட்சத்திர வீரர் – என்னப்பா இப்படி ஆயிடுச்சி?

INDIA IND vs ENG Rohit Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரானது இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்திய நேரப்படி மாலை ஐந்து முப்பது (5.30PM) மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.

Team India IND vs ENg

- Advertisement -

ஏற்கனவே டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளதால் அதே உத்வேகத்தை இந்த ஒரு நாள் தொடரிலும் வெளிப்படுத்த இருக்கிறார்கள். அதே வேளையில் இந்த டி20 தொடரில் இங்கிலாந்து அணியில் இடம்பெறாத நட்சத்திர வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அணிக்கு திரும்புவதால் அவர்கள் அணியும் தற்போது மீண்டும் அசுர பலம் கொண்டு இந்த ஒரு நாள் தொடரை அணுக உள்ளது.

இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதுள்ள இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் பலர் இடம்பெற்று இருப்பதால் நிச்சயம் இந்த ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரரான விராட் கோலி விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டுள்ளது.

Kohli

ஏற்கனவே மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வரும் அவர் இந்த டி20 தொடரிலும் மோசமான செயல்பாட்டை அளித்ததால் பல்வேறு தரப்பிலும் இருந்தும் அவருக்கு அழுத்தங்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஒருநாள் போட்டிக்கு முன்னதாக நேற்று நடைபெற்ற பயிற்சியில் விராட் கோலி ஈடுபடவில்லை.

- Advertisement -

அவருக்கு அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் இடுப்பு பகுதியில் தசைப்பிடிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அவர் இன்றைய ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. இந்த காயம் தற்போது பெரிய அளவில் இல்லை என்றாலும் பிசிசிஐ-யின் மருத்துவ குழு அவரை விளையாட வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

இதையும் படிங்க : பிசிசிஐ விடக்கூடாது, ஓய்வில்லாமல் ஐபிஎல் விளையாடிவிட்டு நாட்டுக்காக ஓய்வு கேட்பது சரியல்ல – சீனியர்கள் மீது ஜாம்பவான் அதிருப்தி

மேலும் இறுதியாக இன்றைய போட்டிக்கு சில மணிநேரம் முன்னதாக ஸ்கேன் செய்த பிறகு அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே விராட் கோலி விளையாடலாமா? வேண்டாமா? என்று தெரிவிக்க இருக்கிறார்கள். இதனால் இன்றைய முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி இடம்பெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

Advertisement