ஹெல்மெட் போட்டுகொண்டு மனைவியுடன் ஸ்கூட்டரில் மும்பையை சுற்றிய விராட் கோலி – வைரல் வீடியோ

Virat Kohli and Anushka Sharma
- Advertisement -

கிரிக்கெட்டில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் தங்களது திறமையால் நாட்டுக்காக வெற்றிகளைத் தேடி கொடுக்கும் போது ரசிகர்கள் அவர்களை சூப்பர் ஸ்டார்களாக கொண்டாடுவது வழக்கமான ஒன்றாகும். மேலும் நாட்டுக்காக வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்க கடினமாக உழைக்கும் அவர்கள் பெரும் புகழுக்கு ஈடாக பணத்தையும் சம்பாதித்து விடுவார்கள். அதனால் விலையுயர்ந்த கார்கள், பங்களா என சொகுசான வாழ்க்கைக்கு பஞ்சமில்லாத அவர்களை இந்த உலகமும் ஊடகமும் ரசிகர்களும் எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். குறிப்பாக அது போன்ற நட்சத்திரங்கள் பொது இடத்தில் சாதாரணமாக வந்தால் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு விடுவார்கள் என்பதால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டிய நிலைமைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

அதனாலேயே கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் சாதாரண மனிதரைப்போல் சுதந்திர பறவையாக வாழ முடியாத அவர்கள் கூண்டுக் கிளியாக வாழவேண்டிய பரிதாபத்திற்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் அவர்களும் மனிதர்கள்தானே என்ற வகையில் சுதந்திர காற்றை சுதந்திர பறவையாக சுவாசித்து புத்துணர்ச்சி பெறுவதற்கு அவ்வப்போது தங்களது அடையாளங்களை மறைத்துக் கொண்டு பொது இடத்திற்கு மக்களோடு மக்களில் ஒருவராக வருவது வழக்கமாகும். அந்த வரிசையில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் நம்பிக்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி இணைந்துள்ளார்.

- Advertisement -

ஸ்கூட்டரில் ரெய்ட்:
ஆம் நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் இவருக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் வெளியே தலையை காட்டினாலேயே கூட்டம் தாறுமாறாக கூடிவிடும். போதாகுறைக்கு பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த 2017இல் திருமணம் செய்து கொண்டதால் இந்தியாவின் உச்சக்கட்ட நட்சத்திரமாக மாறியுள்ள விராட் கோலி சாதாரணமாக வெளியில் நடமாட முடியாதவராகவே இருக்கிறார். அந்த நிலைமையில் சுதந்திரமாக வெளியில் பயணிக்க ஆசைப்பட்ட அந்த இருவரும் தங்களது அடையாளங்களை மறைத்துக் கொள்வதற்காக ஹெல்மெட் போட்டுக்கொண்டு கோடிக்கணக்கில் வைத்துள்ள விலை உயர்ந்த சொகுசு கார்களை தவிர்த்து விட்டு சாதாரண ஸ்கூட்டரில் பயணித்துள்ளார்கள்.

நேற்று மும்பையில் உள்ள பிரபல சாலைகளில் யாரும் அறியாத வகையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு மக்களுடன் மக்களாக உலா வந்த அவர்கள் மழை வரும் சூழல் இருந்ததால் பாதுகாப்புக்காக குடையுடன் ஸ்கூட்டரில் ஜாலியாக ரெய்டு போனார்கள். ஆனால் அதையும் எப்படியோ கண்டுபிடித்த சில ஊடகங்கள் விடாமல் துரத்திக் கொண்டே சென்று வீடியோ எடுத்தனர். ஒரு கட்டத்தில் அதனால் கடுப்பான அனுஷ்கா சர்மா “இங்கேயும் வந்து விட்டீர்களா” என்ற வகையில் கையால் சைகை செய்து அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

திரும்பும் விராட்:
அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்கள் எங்கு சென்றார்கள் என்ற விவரம் விராட் கோலி தரப்பிலும் ஊடக தரப்பிலும் வெளிவராத காரணத்தால் சுதந்திரமாக மும்பை நகரை சுற்றி பார்ப்பதற்காகவே இந்த பயணத்தை மேற்கொண்டது தெரிய வருகிறது. இந்தியாவின் உச்சக்கட்ட நட்சத்திரங்களான இவர்களில் “சக்தா எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் தயாராகி வரும் இந்திய ஜாம்பவான் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அனுஷ்கா சர்மா நடித்து வருகிறார்.

மறுபுறம் கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் முதுகெலும்பு பேட்ஸ்மேனாக விளையாடி வரும் விராட் கோலி 23000+ ரன்களையும் 70 சதங்களையும் அடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து ஏற்கனவே தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ள போதிலும் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக கபில் தேவ் போன்ற முன்னாள் வீரர்கள் அணியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளன நிலையில் அதற்கு செவி சாய்க்காமல் ஃபார்முக்கு திரும்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ள விராட் கோலி சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடர்களில் ஓய்வெடுத்து அடுத்ததாக நடைபெறும் ஆசிய கோப்பையில் களமிறங்க தயாராகி வருகிறார்.

இதையும் படிங்க : IND vs ZIM : இதே பாகிஸ்தானாக இருந்தா திணறி இருப்பாங்க – இந்தியாவை பாராட்டும் முன்னாள் பாக் வீரர்

முத்திரை பதிப்பாரா:
சமீப காலங்களில் பணிச்சுமையால் கடுமையாக அவதிப்பட்டு வரும் அவர் அதிலிருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெறுவதற்காகவே தற்போது எடுத்து வரும் ஓய்வின் ஒரு பகுதியாகவே தனது மனைவியுடன் இப்படி ஜாலியாக ஸ்கூட்டரில் பயணித்துள்ளார். எனவே நல்ல ஓய்வை பெற்றுள்ள அவர் விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பையில் களமிறங்கி தன் மீதான விமர்சனங்களை உடைக்கும் வகையில் அபாரமாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் எந்தவித கேள்வியுமின்றி இடம் பிடிப்பாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement