இந்த போட்டி எனக்கு வாழ்வா ? சாவா ? போட்டி போல இருந்தது. லாஸ்ட்டா ஜெயிச்சாச்சி – இளம்வீரர் நெகிழ்ச்சி

Shankar-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்தது.

srhvsrr

- Advertisement -

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 36 ரன்களும், ஸ்டோக்ஸ் 30 ரன்களும் குவித்தனர். சன் ரைசர்ஸ் அணி சார்பாக இந்தப் போட்டியில் முதன்முதலாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்பிறகு 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்ற ஹைதராபாத் அணி துவக்கத்தில் வார்னர் இஸ்ரோ என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 16 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

ஆனால் அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பாக விளையாடி 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். மனிஷ் பாண்டே 47 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 83 ரன்களுடனும், 51 பந்துகளைச் சந்தித்த விஜய் சங்கர் 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். ஆட்டநாயகனாக மணிஷ் பாண்டே தேர்வானார்.

Shankar

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் கூறுகையில் : இந்த போட்டியில் எனது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. எனக்கு இந்த போட்டியில் பந்து வீச வாய்ப்பு கிடைக்குமா ? என்பது உண்மையிலேயே எனக்கு தெரியாது. இருப்பினும் பந்துவீச வாய்ப்பு கிடைக்கும்போது அதனை சிறப்பாக செயல்படுத்த தயாராக இருந்தேன்.

- Advertisement -

என்னுடைய பந்துவீச்சில் இன்று முடிந்த அளவு லைன் அண்ட லென்த் ஆயவற்றை கரெக்டாக வீச வேண்டும் என்று இருந்தேன். அதன்படி பவுலிங் சிறப்பாக அமைந்தது. பேட்டிங்கிலும் முடிந்த அளவு போட்டியை இறுதிவரை எடுத்துச் செல்லவேண்டும் என்று நினைத்தேன். அதுமட்டுமின்றி எங்களுக்கு எதிராக ஆர்ச்சர் இறுதி நேரத்தில் கடுமையாக பந்து வீசுவார் என்பது தெரியும் .மேலும் பர்சனலாக இந்த போட்டி எனக்கு “டூ ஆர் டை” போட்டியாகும்.

shankar

இதற்கு முன்னர் நான் இந்த தொடரில் 18 பந்துகளை மட்டுமே நான் பேட்டிங்கில் விளையாடி இருந்தேன். அதனால் இந்த போட்டி எனக்கு மிகவும் சவாலாக அமைந்தது. இந்த போட்டியில் நான் அரை சதம் அடித்ததன் மூலம் என்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது என்று விஜய் ஷங்கர் கூறியுள்ளார்.

Advertisement