Vijay Shankar : சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடினாலும், சேப்பாக்கத்தில் விளையாடும்போது நான் இதைத்தான் விரும்புவேன் – விஜய் ஷங்கர்

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமை

Shankar
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

Dhoni 2

இந்த போட்டியுடன் சன் ரைசர்ஸ் அணிவீரர்களான பேர்ஸ்டோ மற்றும் வார்னர் ஆகியோர் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் விளையாட தாயகம் திரும்புவதால் இந்த போட்டியை வெற்றியுடன் முடிக்க சன் ரைசர்ஸ் அணி தயாராகி வருகிறது. அதேபோன்று கடந்த இரு போட்டியில் தோல்வி அடைந்த சென்னை அணி தோல்வியில் இருந்து மீண்டு பிளேஆப் வாய்ப்பினை உறுதி செய்யும் நோக்கோடு விளையாட உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் போட்டிக்கு முன்பு இந்த போட்டி குறித்து பேசிய விஜய் ஷங்கர் கூறியதாவது : உலகக்கோப்பை தொடரை பற்றி இப்போது நான் எதையும் நினைக்கவில்லை. தற்போது நான் விளையாடும் சன் ரைசர்ஸ் அணிக்கு எனது பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். சென்னை சேப்பாக்கம் மைதானம் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று இங்கு விளையாடுவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சிதான்.

Vijay-Shankar

நான் சன் ரைசர்ஸ் அணியில் விளையாடினாலும் எனக்கு தெரியும் சேப்பாக்கத்தில் சென்னை அணிக்கே அதிக அளவு ஆதரவு கிடைக்கும். மேலும், எனக்கும் தனிப்பட்ட முறையில் சென்னை சி.எஸ்.கே அணி மிக நெருக்கமானது நான் விரும்பும் ஒரு அணி சென்னை என்றும், இருப்பினும் நான் எனது அணிக்காக தற்போது எனது பங்களிப்பை தர காத்திருக்கிறேன் என்று விஜய் ஷங்கர் கூறினார்.

Advertisement