இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையப்படுத்தி படம் ஒன்றை உருவாக்க உள்ளனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நீண்டகாலமாக நடைபெற்று வந்தது.
தற்போது இந்த பேச்சுவார்த்தை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ளது. தனது பயோபிக் படம் உருவாக உள்ளது குறித்து முத்தையா முரளிதரன் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது :
900 என்று எனது சாதனை நியாபகமாக படத்தின் பெயர் வைக்கப்பட்டு அதில் விஜய் சேதுபதி போன்ற ஒரு திறமையான நடிகர் என் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பெருமை என்று தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன் ஏப்ரல் 17 1972ஆம் ஆண்டு கண்டியில் தமிழ் இந்து குடும்பத்தில் பிறந்தார்.
இவரின் ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் கிரிக்கெட்டில் அவர் பட்ட கஷ்டம் மேலும் அதனைத் தாண்டி அவர் படைத்த சாதனை மற்றும் அவருக்கு கிடைத்த வெற்றி என அனைத்தையும் இந்த படம் பிரதிபலிக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க தமிழ் நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். என்று தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.