ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முன்தினம் துவங்கிய ஆசிய கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி முதல் வெற்றியை பெற்றிருந்த வேளையில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற முடிந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது கடைசி ஓவரில் இரண்டு பந்துகள் மீதம் இருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்த ஆசிய கோப்பை தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய அணி அடுத்தடுத்து இந்த வெற்றியை தொடர காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியை நேரில் காண தெலுங்கு திரையுலகின் பிரபல இளம் நடிகரான விஜய் தேவரகொண்டா நேரில் சென்று இருந்தார்.
அப்பொழுது மைதானத்தில் வர்ணனையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா சுவாரஸ்யமான பல பதில்களை அளித்து வியக்க வைத்தார். அந்த வகையில் மிகவும் உற்சாகமாக பேசிய விஜய் தேவரகொண்டா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில் : தோனியின் பயோபிக் படத்தில் நடிக்க எனக்கு ஆசையாக உள்ளது. ஆனால் ஏற்கனவே சுஷாந்த் சிங் அதை செய்து விட்டார். எனவே தற்போது நான் விராட் கோலியின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்தார்.
இதையும் படிங்க : தற்போதையை கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் இந்த இந்திய வீரர்தான் – புகழ்ந்து தள்ளிய வாசிம் அகரம்
அண்மையில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் ஆகியோரது நடிப்பில் வெளியான லைகர் படம் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் படுதோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.