இந்திய அணியை வீழ்த்தமுடியதா ? இந்த முறை முதல் பன்ச் கொடுக்கபோறேதே நாங்கதான் – தெ.ஆ வீரர் அதிரடி

Philander-1
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

Umesh

- Advertisement -

இந்தப் போட்டிக்கு முன்னர் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் ஒரு பயிற்சிப் போட்டியில் மோதின. மூன்று நாட்கள் கொண்ட அந்த பயிற்சி போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் பிலாண்டர் இந்த டெஸ்ட் தொடர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த முறை எங்களுக்கு இந்திய அணியுடனான தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடர் ஆகும்.

எனவே எப்பொழுதும் மந்தமான அணி என்று பெயரெடுத்த நாங்கள் இந்த முறை முதல் பஞ்ச் எங்களுடைய தான் என்று காண்பிக்க விரும்புகிறோம். இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது எளிதான விடயம் கிடையாது. இருந்தாலும் சிரமப்பட்டு இந்த வேலையை நாங்கள் செய்து முடிக்க இருக்கிறோம். இந்திய அணியை இந்த முறை முதல் போட்டியில் தோற்கடித்து நாங்கள் சிறந்த அணி என்று அனைவருக்கும் தெரிவிப்போம்.

philander

மேலும் நாங்கள் அனைவரும் எங்களுடைய ஒட்டு மொத்த உழைப்பையும் இந்த போட்டியில் வெளிப்படுத்தினால் நிச்சயம் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறமுடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தற்போது தொடங்கியுள்ளதால் வெற்றியுடன் தொடங்கினால் அது எங்கள் அணிக்கு உத்வேகமாக இருக்கும் எனவே முதல் டெஸ்ட் போட்டியை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் நிச்சயம் இந்திய அணியை வீழ்த்த முயற்சிப்போம் என்று பிலாண்டர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement