SRH vs KKR : இன்றைய போட்டியில் உத்தப்பா விளையாடாததன் காரணம் இதுதான் – தினேஷ் கார்த்திக்

ஐ.பி.எல் தொடரின் 38 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு ஐதராபாத் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், வில்லியம்சன் தலைமை

Karthik
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 38 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு ஐதராபாத் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

Dinesh

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி தற்போது கொல்கத்தா அணி களமிறங்கி ஆடி வருகிறது. தற்போதுவரை கொல்கத்தா அணி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து ரன்களை அடித்துள்ளது.

டாஸ் போடப்பட்ட பிறகு அணியில் உள்ள மாற்றங்களை பற்றி பேசிய தினேஷ் கார்த்திக் கூறியதாவது : பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கரியப்பா மற்றும் ப்ரித்வி ராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மேலும், உத்தப்பா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

Robin

உத்தப்பா நீக்கம் பற்றிய பேசிய கார்த்திக் கூறியதாவது : உத்தப்பா இந்த தொடரில் ரன் குவிக்க சற்று திணறி வருகிறார். ஆனால், அவரின் திறமை மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை உண்டு தற்போதைக்கு அவருக்கு மனதளவில் தயாராக ஓய்வு வேண்டும். அதற்காக இந்த போட்டியில் இருந்து நீக்கியுள்ளோம். அவர் மீண்டும் அடுத்த முக்கியமான போட்டியில் அணியில் பங்குபெறுவார் என்று கார்த்திக் கூறினார்.

Advertisement