விளையாடனும்னு ஆசப்பட்ட வீரருக்கு பிளேயிங் லெவன் அணியில் இடமில்லை – தோனி எடுத்த அதிரடி முடிவு

Dhoni 1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரும்பியுள்ள சிஎஸ்கே அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையில் இந்த போட்டியில் களம் கண்டுள்ளது.

cskvsdc

- Advertisement -

அதேபோல் கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்த டெல்லி அணி இம்முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்புடனும் இந்த போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் சற்று முன்னர் போடப்பட்ட டாசுக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் வெற்றி பெற்று பந்துவீச்சை தீர்மானம் செய்தார்.

அதன்படி தற்போது சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் டெல்லி அணியின் முக்கிய வீரர்கள் பலர் இடம்பெறவில்லை. அதேபோன்று சிஎஸ்கே அணியிலும் சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

uthappa 1

குறிப்பாக கடந்த ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா இந்த ஆண்டு டிரேடிங் முறையில் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்தார். ஏற்கனவே சிஎஸ்கே அணியில் இடம்பிடித்த போதே தான் இம்முறை சிஎஸ்கே அணிக்காக தொடக்க வீரராக விளையாட வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இன்று விளையாடும் சிஎஸ்கே அணியில் தோனி அவரை தேர்வு செய்யவில்லை.

துவக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்லிஸிஸ் ஆகியோர் விளையாடுகின்றனர். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் ராயுடுவையும், ரெய்னாவையும் சேர்த்துள்ளதால் அணியில் ராபின் உத்தப்பாவிற்கு வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது. மேலும் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட கிருஷ்ணாப்பா கவதமிற்கும் அணியில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement