எனக்கு கிடைச்ச இந்த வாய்ப்பை மிஸ் பண்ணகூடாதுனு சூப்பரா பவுலிங் போட்டேன் – ராஜஸ்தான் வீரர் வெளிப்படை

RR
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தெரிவு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே குவித்தது. துவக்க வீரராக ப்ரித்வி ஷா2 ரன்களிலும், தவான் 9 ரன்களிலும் ஆட்டம் இருந்து வெளியேற 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது.

pant

- Advertisement -

அதன்பின்னர் ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து பண்ட் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் இணைந்தனர். சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாய்னிஸ் டக் ஆகி வெளியேற 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியது. அப்போது அணியை சரிவில் இருந்து மீட்ட ரிஷப் பண்ட் ஆகியோரது லலித் யாதவ் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 51 ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய லலித் யாதவ் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ஒருபுறம் பண்ட் அதிரடியாக விளையாடி கொண்டிருந்தார்.

இறுதிவரை களத்தில் இருந்தால் பெரிய ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ரிஷப் பண்ட் 51 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் டாம் கரன் 21 ரன்கள் மற்றும் கிறிஸ் வோக்ஸ் 15 ரன்கள் அடிக்க டெல்லி அணி தட்டுத்தடுமாறி 147 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி துவக்கத்தில் பட்லர் 2 ரன்களிலும், வோரா 9 ரன்களிலும், சாம்சன் 4 ரன்களிலும், துபே இரண்டு ரன்களிலும் ஆட்டமிழக்க 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தள்ளாடியது.

morris

பின்னர் மிடில் ஆர்டரில் டேவிட் மில்லர் மட்டும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். அவரும் 43 பந்துகளில் 62 ரன்களை குவித்து இருந்தபோது ஆட்டமிழந்து வெளியேற போட்டி டெல்லி அணிக்கு சாதகமாக மாறியது. ஆனால் இறுதி நேரத்தில் ராகுல் திவாதியா மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். அதிலும் குறிப்பாக கிறிஸ் மோரிஸ் 18 பந்துகளை சந்தித்து 4 சிக்சர்களுடன் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய உனட்கட் 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இவரது இந்த சிறப்பான பவுலிங் காரணமாகவே டெல்லி அணி குறைந்த ரன்களில் சுருண்டது. இதன் காரணமாக இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் பேசுகையில் : என்னிடம் நிறைய அனுபவம் உள்ளது. அதனால் இது போன்ற கடினமான சூழ்நிலைகளிலும் நான் சிறப்பாக பந்து வீசுகிறேன். எனக்கு ராஜஸ்தான் அணியில் பந்துவீச சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

unadkat

எனவே புது பந்தின் நான் நினைத்தபடி பந்துவீசி வருகிறேன். சென்ற முறை என்னால் சிறப்பாக பந்து வீச முடியவில்லை அதனால் இம்முறை இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். அதுமட்டுமின்றி முதல் போட்டியிலும் நான் வாய்ப்பை பெறாததால் இந்த போட்டி எனக்கு முக்கியமான ஒன்று. அதனால் இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி உள்ளேன். ஒரே ஓவரில் என்னால் நான்கைந்து வேரியேஷன்களில் பந்துவீச முடியும். இன்றைய போட்டியில் நான் சரியான வேகம் மற்றும் லென்த்த்தில் பந்து வீசினேன். அது எனக்கு மிகவும் உதவியது வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியில் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement