என் மகனின் கனவு இப்போ நிறைவேறியாச்சி. ரொம்ப சந்தோஷமா இருக்கு – உம்ரான் மாலிக் தந்தை பேட்டி

Umran-4
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளனர். அந்தவகையில் சன்ரைசர்ஸ் அணியில் தமிழக வீரர் நடராஜன் பதிலாக அறிமுகமாகிய ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 21 வயதான உம்ரான் மாலிக் ரசிகர்களின் கவனத்தை மட்டுமின்றி இந்திய அணியின் நிர்வாகத்தின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளார் என்றே கூறலாம். ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2 விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தி இருந்தாலும் தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துகளை பறக்கவிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

umran 2

- Advertisement -

இவரது புல்லட் வேக பந்துவீச்சை கண்டு வியந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் உம்ரான் மாலிக்கை தனியாக கவனம் செலுத்தி அவரின் திறமையை தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். இப்படி இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் அதுவும் 21 வயதில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவதை பார்த்த ரசிகர்களுக்கும் அவர்மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசியதை கண்ட நம் ரசிகர்களுக்கு இந்திய வீரர் ஒருவரும் இவ்வாறு பந்து வீசுவதை பார்த்ததும் பெரிதளவு பாராட்டி வருகின்றனர். உம்ரான் மாலிக் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னர் சன் ரைசர்ஸ் அணியின் நெட் பவுலராக இருந்தார். பின்னர் நடராஜனுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அணியில் இடம் பிடித்திருந்தார்.

umran

இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் இடம் பிடித்த அவர் 153 கி.மீ வேகத்தில் பந்து வீசி இந்த ஐபிஎல் தொடரில் அதிவேக பந்தினை வீசிய பவுலர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். இந்நிலையில் உம்ரான் மாலிக்கின் தந்தை அளித்துள்ள பேட்டியில் தனது மகனின் நீண்ட நாள் கனவு குறித்து நெகிழ்ச்சியான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

umran 3

அதன்படி உம்ரான் மாலிக் கிரிக்கெட் ஆட ஆரம்பித்ததில் இருந்து விராட் கோலியை என்றாவது ஒருநாள் நேரில் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டான், அதுவே அவனுடைய கனவாகும் இருந்தது. இன்று ஐபிஎல் தொடரில் அவன் விளையாடி விராட் கோலியிடம் நேரில் பேசி விட்டான் அவனுடைய கனவு நிறைவடைந்தது எனக்கு மகிழ்ச்சி என உம்ரான் மாலிக்கின் தந்தை பேட்டி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement