MI vs KXIP : பந்து ஸ்டம்பில் பட்டும் அவுட் கொடுக்காத அம்பயர் – காரணம் இதுதான்

நேற்றைய போட்டியில் இரண்டாவதாக மும்பை அணி விளையாடும்போது ஹார்டிக் பாண்டியா எதிர்கொண்ட ஒரு பந்து ஸ்டம்பில் பட்டு பவுண்டரி சென்றது. இதை கவனிக்காத அம்பயர் வைட் பவுண்டரி

Umpire
- Advertisement -

நேற்றைய போட்டியில் இரண்டாவதாக மும்பை அணி விளையாடும்போது ஹார்டிக் பாண்டியா எதிர்கொண்ட ஒரு பந்து ஸ்டம்பில் பட்டு பவுண்டரி சென்றது. இதை கவனிக்காத அம்பயர் வைட் பவுண்டரி என்று அறிவித்தார். அவுட் கொடுக்காதது கூட பரவாயில்லை பந்தினை வைட் என்று அறிவித்ததால் பஞ்சாப் அணி வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பந்தின் ரீபிளே வீடியோவில் பந்து ஸ்டம்பில் அடித்தது தெளிவாக பதிவாகி உள்ளது. அம்பயர்களின் இந்த தொடர்ச்சியான கவனக்குறைவு தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 24 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ராகுல் சதமடித்து 100 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

Hardik

பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய மும்பை அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை தவித்தது. பிறகு இறங்கிய மும்பை அணியின் தற்காலிக கேப்டன் பொல்லார்ட் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 83 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார். இதில் 10 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.

Rahul

ஒரு கட்டத்தில் மும்பை அணி எளிதாக தோற்றுவிடும் என்ற நிலையில் இருந்து பொல்லார்ட்டின் நம்பமுடியாத சிறப்பான பேட்டிங்கால் பஞ்சாப் அணியை திணறவைத்தார். சந்திக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு பறக்கவிட்டு மும்பை அணியை வெற்றபெற வைத்தார். முடிவில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்ட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்க பட்டார்.

Advertisement