SRH vs DC : முதல் பந்திலே தவறான முடிவை எடுத்த அம்பயர் – கடுப்பான ரசிகர்கள்

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் துவங்கியது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Umpire
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் துவங்கியது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குப்தில் 36 ரன்களும், மனிஷ் பாண்டே 30 ரன்களையும் குவித்தனர். டெல்லி அணி சார்பில் கீமோ பால் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இந்த போட்டியின் முதல் ஓவரை டெல்லி அணியின் ட்ரெண்ட் போல்ட் வீசினார். இந்த பந்தினை எதிர்கொண்ட சஹா பந்தினை கால்பகுதியில் வாங்க அம்பயர் அவுட் என்று அறிவித்தார். ஆனால், ரீப்பிளே செய்து பார்க்கும்போது பந்து பேட்டில் பட்டு காலில் பட்டது தெரியவந்ததால் மீண்டும் அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் சஹா அவுட்டிலிருந்து தப்பினார்.

இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பல தவறுகளை செய்துவரும் அம்பயர்கள் இந்த போட்டியில் முதல் பந்தில் தவறான முடிவை எடுத்தது ரசிகர்களை கடுப்பாக்கியது. முக்கியமான போட்டிகளில் இதுபோன்று நடப்பது ஆட்டத்தை மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement