SRH vs CSK : மீண்டும் நோபால் தர மறுத்த அம்பயர். சர்ச்சையில் சென்னை போட்டி – விவரம் இதோ

நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி சிறப்பான துவக்கம் இருந்தும் மிடில் ஆர்டர் சரிவினால் குறைந்த ரன்களையே அடித்தது. இந்த போட்டியில் கடைசி ஓவரில் ஜடேஜா புவனேஷ்வர்

Jadeja
- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி சிறப்பான துவக்கம் இருந்தும் மிடில் ஆர்டர் சரிவினால் குறைந்த ரன்களையே அடித்தது. இந்த போட்டியில் கடைசி ஓவரில் ஜடேஜா புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆடிக்கொண்டிருந்தார். அந்த ஓவரில் ஏற்கனவே ஒரு பந்தை ஒன் பவுன்ஸ் என்று அறிவித்த அம்பயர் அடுத்ததாக புவனேஷ்வர் குமார் வீசிய பவுன்சரை நோபால் இல்லை என்று அறிவித்தார். ஆனால், ஜடேஜா மற்றும் ராயுடு அம்பயரிடம் வாக்குவாதம் செய்தனர். அம்பயர்களின் இந்த செயல் மீண்டும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஆனால், இந்த பந்து ஜடேஜாவின் உயரத்தை விட அதிக அளவில் பறந்து சென்றது. நியாயப்படி அந்த பந்து நோபால் என்றே அறிவித்திருக்க வேண்டும். ஆனால், களத்தில் இருந்த அம்பயர்கள் மெத்தனமாக அவர்கள் இஷ்டத்திற்கு நடந்துக்கொண்டது ரசிகர்களை வசைபாட வைத்துள்ளது என்றே கூறவேண்டும். அம்பயரின் இந்த செயலை சென்னை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வசைபாடி வருகின்றனர்.

ஐ.பி.எல் தொடரின் 33 ஆவது போட்டி நேற்று ஐதராபாத் நகரில் 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும் மோதின.

- Advertisement -

Raina

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுப்ளிஸிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அதன் பின் வந்த வீரர்கள் பொறுமையாக ஆட சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

Bairstow

பின்னர் ஆடிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். வார்னர் 50 ரன்களும், பேர்ஸ்டோ 61 ரன்களையும் குவித்து வெற்றிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்தனர். பின்பு வந்த வீரர்கள் சுமாராக ஆட அந்த அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை குவித்தது. இதனால் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Advertisement