2021 மெகா ஏலத்திற்கு முன் மும்பை அணி தக்கவைக்கப்போகும் 5 முன்னணி வீரர்கள் இவர்கள் தான் – லிஸ்ட் இதோ

MI
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி 5வது முறையாக வெற்றிகரமாக கோப்பையை வென்று அசத்தி விட்டது 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு புத்தம் புதிய ஐபிஎல் அணிகளை கட்டமைக்க வேண்டி ஐபிஎல் நிர்வாகம் புதிய திட்டத்தை தீட்டி இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த வருடம் மிகப்பெரிய ஏலம் நடைபெறும் என்று அறிவித்து இருக்கின்றனர். ஒரு அணி அதிகபட்சமாக 5 வீரர்களை தக்க வைக்கலாம். அப்படி மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைக்க கூடிய வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

Rohith-1

ரோகித் சர்மா :

- Advertisement -

அந்த அணியின் கேப்டன் ஆவார். ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 5 கோப்பைகளை வென்று கொடுத்துவிட்டார். இன்னும் பல ஆண்டுகள் இவர் விளையாட வேண்டி இருக்கிறது. இவர்தான் அந்த அணியின் மிகப்பெரிய சொத்து இதனால் கண்டிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை தக்க வைக்கும்.

Bumrah

ஜஸ்பிரித் பும்ரா :

- Advertisement -

2018 ஆம் ஆண்டு பெரிய ஏலம் நடைபெற்றபோது 3வது வீரராக இவர் தக்க வைக்கப்பட்டார். தொடர்ந்து தனது மிகச் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்த வருட ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த வருட திட்டத்தில் இருப்பார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Pandya

ஹர்திக் பாண்டியா :

- Advertisement -

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரிய சொத்து. இவர்தான் அந்த அணியின் முதன்மை ஆல்ரவுண்டர் கண்டிப்பாக இவரும் அந்த அணியால் எந்த விலை கொடுத்தாவது தக்க வைக்கப்படுவார்.

Dekock

குவின்டன் டி காக் :

- Advertisement -

துவக்க வீரரான இவர் தற்போது தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். ஒரு வழியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு துவக்க வீரர் கிடைத்து விட்டார். இவர் 4-வது வீரராக தக்க வைக்கப் பட வாய்ப்பு இருக்கிறது.

sky 2

சூரியகுமார் யாதவ் :

இந்த இடத்திற்கு இரண்டு அல்லது மூன்று வீரர்கள் போட்டியிடலாம் கண்டிப்பாக இறுதியில் சூர்யகுமார் யாதவ் தக்க வைக்க படலாம். ஏனெனில் அந்த அணியின் மிடில் ஆர்டர் தூண் இவர்தான்.

Advertisement