ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான மார்னஸ் லாபுஷேனை ஏலத்தில் எடுக்க காத்திருக்கும் 3 அணிகள் – லிஸ்ட் இதோ

Marnus
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்தபடி இந்த ஆண்டிற்க்கான ஐ.பி.எல் தொடரின் ஏலம வரும் பிப்ரவரி 18 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. இதுவரை ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காத வெளிநாட்டு வீரர்கள் தங்களது ஐ.பி.ல் ஆட தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மார்னஸ் லாபுஷேனும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பல்வேறு ஆஸ்திரேலிய வீரர்களும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் தங்களது பெயரை இந்த ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.

marnus

- Advertisement -

மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி வரும் மார்னஸ் லாபுஷேன் சமீபத்தில் நடந்து முடிந்த பிபிஎல் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு மிடில் ஓவர்களில் பந்தை சிறப்பாக ரொட்டேட் செய்து தனது ஆட்டத்தை வெளிபடித்தினார். இவரை ஏலத்தில் எடுத்து விட மூன்று அணிகள் தற்பொழுது முனைப்புடன் இருக்கின்றது என நாம் எதிர்பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் – போன சீஸனில் சென்னை அணியின் மிகப்பெரிய பலவீனமே மிடில் ஒவர்களில் யாரும் சரியாக பங்களிக்காததே. டுபிளெசி ஓப்பனிங் இறங்க அவரது ஸபாட்டை நிரப்ப பெரும் தலைவலியாக இருந்தது. கடைசி நேரத்தில் ருத்ராஜ் சிறப்பாக மிடில் ஓவர்களில் ஆடி கொடுத்தார் எனினும் சென்ற ஆண்டு செய்த தவறை இந்தாண்டும் சென்னை செய்யாது. எனவே மார்னஸ் லாபுசாக்னேவை சென்னை அணி எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

கிங்ஸ் லெவென் பஞ்சாப் – பவர்பிளே ஓவர்களில் கெயில் , ராகுல் ,அகர்வால் அதிரடி ஆட்டம் காண்பித்தாலும் மிடில் ஓவர்களில் சாதுர்யமாய் ஆடக்கூடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லாதது நம் அனைவருக்கு தெரிந்த விஷயமே. எனவே மார்னஸ் லாபுசாக்னேவை பஞ்சாப் அணி வாங்கும் என நாம் முழுமையாக எதிர்பார்க்கலாம்.

Marnus

ராஜஸ்தான் ராயல்ஸ் – ஸ்டீவ் ஸ்மித்தை வெளியிட்டு அதிர்ச்சி அளித்தது அனைவரும் அறிந்ததே. ஏலத் தொகை பணிரெண்டு கோடியே ஐம்பது லட்சம் கைவசம் வைத்துள்ளது .மேட்ச் வின்னர்களான பட்லர் , ஸ்டோக்ஸ் , ஆர்ச்சர் ஒருபக்கம் இருக்க மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்மித் இடத்தை நிரப்ப சரியான ஆள் யார் என்று பார்க்கையில் அது மார்னஸ் லாபுசாக்னேவே. எனவே ராஜஸ்தானும் லாபுசாக்னேவை வாங்கும் பந்தயத்தில் சேரும் என நாம் நம்பலாம்.

Advertisement