ஐ.பி.எல் தொடரில் எனது டார்கெட் இந்த இரண்டு இந்திய வீரர்களின் விக்கெட்டுகள் தான் சவால்விடும் – இங்கிலாந்து வீரர்

Tom-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 13 ஆவது சீசன் வரும் மார்ச் 29ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்கள் இடம் தற்போது உள்ள வீரர்களை வைத்து தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் டாம் கர்ரன் இடம் பெற்றுள்ளார்.

Tom

- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள இவர் அந்த அணிக்காக கடுமையாக உழைத்து வெற்றியை தேடிக் கொடுத்து வருகிறார் . ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் இவர் இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விக்கெட்டை வீழ்த்துவதுதான் தனது இலக்கு என்று கூறியுள்ளார் ..

இதுகுறித்து அவர் கூறியதாவது : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உலகின் தலை சிறந்த வீரர்களாக இருக்கின்றனர். பந்துவீச்சாளர்கள் சரியாக அவர்கள் திட்டத்தை செயல்படுத்தினால் அவர்களது விக்கெட்டை எடுக்கலாம் . இதனால் என்னுடைய திறமையை வைத்து அவர்கள் விக்கெட்டை களை எடுக்க காத்திருக்கிறேன்.

tom 1

இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் டாம் கர்ரான் கூறியுள்ளார். இவரது சகோதரர் சாம் கர்ரான் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இந்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement