ரோஹித் சர்மாவின் அந்த இடத்தை சாய் சுதர்சனால் நிச்சயம் நிரப்ப முடியும் – தமிழ்நாடு பேட்டிங் கோச் கருத்து

Sai and Rohit
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று முன்தினம் மே 7-ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது 38 வயதாகும் ரோகித் சர்மா எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டதால் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரராக யார் களம் இறங்குவார்கள்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரோஹித்தின் இடத்தை சாய் சுதர்சனால் நிரப்ப முடியும் : தமிழக பேட்டிங் கோச் கருத்து

அதோடு ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் ஒரு துவக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நிரந்தர இடத்தினை பிடித்து விட்ட வேளையில் அவருடன் களமிறங்கப்போகும் மற்றொரு துவக்க வீரரும் இளம் வீரராக இருந்தால் அது நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும் என்றும் நீண்டகாலம் அந்த துவக்க ஜோடி தொடர்ச்சியாக விளையாடும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் ரோகித் சர்மாவின் இடத்திற்கு பல்வேறு வீரர்களுக்கு இடையே போட்டி நிலவி வரும் நிலையில் தமிழக இடதுகை ஆட்டக்காரரான சாய் சுதர்சன் அவரது இடத்தில் களமிறங்கினால் நிச்சயம் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும் என்றும் ரோகித் சர்மாவின் இடத்தை சாய் சுதர்சனால் நிரப்ப முடியும் என்றும் தமிழக அணியின் பேட்டிங் பயிற்சியாளரான ஜபார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சாய் சுதர்சன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட தகுதியான ஒரு வீரர். அவரால் சிங்கிள்ஸ்ஸை அதிகளவு ரொட்டேட் செய்ய முடியும் அதேபோன்று தேவையான போது பவுண்டரிகளையும் அடிக்க முடியும். அதிலும் குறிப்பாக அவருடைய பேக் லிப்ட் மிகச் சிறப்பாக இருப்பதால் அவரால் தொடர்ந்து ரன்களை குவிக்க முடியும்.

- Advertisement -

ஏற்கனவே உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வரும் அவரால் சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை வழங்க முடியும். ஏற்கனவே தமிழ்நாடு அணிக்காக மிகச் சிறப்பாக ரன் குவித்து வரும் அவர் இந்திய டெஸ்ட் அணிக்கும் தேர்வு செய்யப்பட்டால் பிரமாதமான ரன் குவிப்பை வழங்குவார்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள 4 வீரர்கள் – விவரம் இதோ

ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற கவுண்டி போட்டிகளில் பங்கேற்று மிகச் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளதால் இங்கிலாந்து தொடருக்கான அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அதிலும் அவர் நிச்சயம் அசத்துவார் என்று நம்பிக்கை தனக்குள்ளதாக தமிழக பேட்டிங் கோச் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement