டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள 4 வீரர்கள் – விவரம் இதோ

Sai Sudharsan
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஏற்கனவே டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ரோகித் சர்மா தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளதால் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும் அதுவும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை தான் அவர் விளையாட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

ரோஹித் சர்மாவுக்கு மாற்றுவீரராக வர வாய்ப்புள்ள 4 வீரர்கள் :

இப்படி ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் அவரது துவக்க வீரருக்கான இடத்தை நிரப்ப வேண்டிய அவசியம் தற்போது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்க இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்போது நிச்சயம் ரோகித் சர்மாவிற்கான மாற்று வீரர் யார்? என்பது தெரியவரும். இருப்பினும் ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள 4 வீரர்கள் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

1) சுப்மன் கில் : ஏற்கனவே இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் சுப்மன் கில் தனது டெஸ்ட் கரியரின் ஆரம்ப கட்டத்தில் துவக்க வீரராக களமிறங்கிய அனுபவம் உடையவர். ஆனால் சமீபகாலமாகவே மூன்றாவது இடத்தில் களமிறங்கி வந்த சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் மீண்டும் அவர் துவக்க வீரருக்கான இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.

2) சாய் சுதர்சன் : தமிழக இடதுகை துவக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன் உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் என தொடர்ந்து தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் துவக்க வீரருக்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தால் நிச்சயம் அது இந்திய அணிக்கே கூடுதல் சாதகம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் தொடர்ச்சியாக பெரிய ரன்களை குவிக்கும் திறனுடைய பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் சாய் சுதர்சன் ஐபிஎல் போட்டிகளில் சர்வதேச பவுலர்களை வெகு எளிதாக எதிர்கொள்வது டெஸ்ட் அணியிலும் அவர் சாதிக்கக்கூடியவர் என்பதை காட்டுவதாக பலரும் கூறி வருகின்றனர்.

3) கே.எல் ராகுல் : இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லாமல் எந்த இடத்தில் களமிறங்க வாய்ப்பு கிடைத்தாலும் அட்டகாசமாக செயல்பட்டு வரும் கே.எல் ராகுல் இந்திய டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டர், டாப் ஆர்டர், துவக்க வீரர் என அனைத்து நிலைகளிலும் விளையாடி இருக்கிறார். எனவே அவருக்கு நிரந்தர இடத்தை வழங்கும் வகையில் அவர் துவக்க வீரராக மாற்றப்பட்டால் இன்னும் பல ஆண்டுகள் அவரால் தொடர்ந்து விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தனது முடிவை வாபஸ் பெற்ற இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.. திடீர் மன மாற்றத்திற்கு என்ன காரணம்? – விவரம் இதோ

4) அபிமன்யு ஈஸ்வரன் : கடந்த பல தொடர்களாகவே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து வரும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு இன்னும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. உள்ளூர் கிரிக்கெட்டில் மலை போல் ரன்களை குவித்து வரும் அவர் தனது இடத்திற்காக காத்திருக்கும் வேளையில் அந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டால் நிச்சயம் அது சரியான முடிவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement