சாரி நான் தப்பா பேசிட்டேன். நியூசிலாந்து நாட்டு ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட – டிம் பெயின்

Paine
- Advertisement -

ஐசிசி நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியிருக்கிறது நியூசிலாந்து அணி. மழையின் காரணமாக ட்ராவை நோக்கி சென்றுகொண்டிருந்த போட்டியை, தங்களது அசாத்திய திறமையின் மூலமாக வென்று காட்டியிருக்கும் அந்த அணியை, அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும், பல கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணியை ஏளனமாக பேசியதற்காக, அந்த நாட்டு ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார் ஆஸ்திரேலியாவை சார்ந்த வீரர் ஒருவர்.

nz

- Advertisement -

இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணியை இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வீழ்த்தியிருந்ததால் நியூசிலாந்து அணிக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று அனைவரும் தெரிவித்து வந்தனர். அப்போது பேட்டியளித்த ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனான டிம் பெய்ன், நட்ச்சத்திர வீரர்கள் இல்லாத இங்கிலாந்து அணியை வீழ்த்தி விட்டதால் நியூசிலாந்து அணியை மிகப் பெரிய அணியாக கருத முடியாது. எந்த ஒரு சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடும் நட்சத்திர வீரர்களை கொண்ட இந்திய அணியிடம் நியூசிலாந்து அணியானது தோல்வியைத் தழுவும் என்று பேசியிருந்தார்.

அவருடைய இந்த கருத்திற்கு நியூசிலாந்து ரசிகர்கள் கடுமையான விமர்ச்சனங்களை தெரிவித்து இருந்தனர். தற்போது நியூசிலாந்து நாட்டு ரேடியோ ஒன்றில் பேசிய டிம் பெய்ன், அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடம் முன்னர் அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது, சில நேரங்களில் நாம் பேசுவது மற்றவர்களால் தவறாக புரிந்துகொள்ளப்படும். அதுபோல தான் நியூசிலாந்து ரசிகர்களும் நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டார்கள்.

taylor-1

இருந்தாலும் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு சிறிய நாடாக இருக்கிறபோதும் நியூசிலாந்து அணியின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது. அவர்கள் விளையாடுவதைப் பார்ப்பது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். இறுதிப் போட்டியில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் அணியை சிறந்த முறையில் வழிநடத்தி சென்றிருக்கிறார். இனிவரும் காலங்களிலும் அவ்வாறே அவர் செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று அதில் அவர் பேசியிருக்கிறார்.

IND

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில், இந்திய அணி வீரர்கள் எங்களுக்கு மனரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தி தான் அந்த தொடரில் வெற்றி பெற்றார்கள் என்று இதற்கு முன்னரே பேட்டி கொடுத்து இந்திய ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்ட டிம் பெய்ன், அதற்குப் பிறகு இந்திய அணிதான் சிறந்த அணி என்று பேட்டிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement