காயமடைந்த டூபிளெஸ்ஸிஸ்க்கு பதிலாக விளையாட வாய்ப்புள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Faf
- Advertisement -

சென்னை அணியின் முன்னணி துவக்க வீரரான டூபிளெஸ்ஸிஸ் 14வது ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்ட காரணத்தினால் அமீரகத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் லீக்கில் கலந்துகொண்ட அவர் ஆன்ட்ரே ரசல் வீசிய பந்தில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரில் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. அதனை தொடர்ந்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் கரீபியன் லீக் தொடரில் விளையாடி வரும் அவர் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

faf 1

- Advertisement -

சமீபத்தில் சதம் விளாசிய அவர் அடுத்ததாக தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேளையில் காயம் காரணமாக கரீபியன் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாடவில்லை. அதுமட்டுமின்றி இன்று நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியிலும் அவரால் விளையாட முடியாது என்று கூறுகிறது. அதோடு மட்டுமல்லாமல் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் துவங்கவில்லை எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விளையாடுவது சந்தேகம் ஆகியுள்ளது.

தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் டூபிளெஸ்ஸிஸ் இந்த ஐபிஎல் தொடர் முழுவதையும் தவறவிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணி தற்போது சிக்கலை சந்தித்து உள்ளது என்றே கூறலாம். ஏனெனில் அதிரடி தொடக்க வீரரான அவர் சென்னை அணிக்காக சிறப்பான துவக்கத்தை அளித்து வருகிறார். இந்நிலையில் அவர் இந்த தொடரில் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக துவக்க வீரராக விளையாட வாய்ப்பு உள்ள மூன்று வீரர்களைப் பற்றி நாம் இந்த பதிவில் காண உள்ளோம்.

uthappa 1

ராபின் உத்தப்பா : கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இவர் தனது மோசமான பார்ம் காரணமாக அந்த அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அதன் பின்னர் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்ட உத்தப்பா தற்போதுவரை சிஎஸ்கே அணிக்காக களம் இறங்காமல் இருந்து வந்தாலும் நிச்சயம் அவர் துவக்க வீரருக்கான போட்டியில் சிஎஸ்கே அணியில் இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

- Advertisement -

Jagadeesan

ஜெகதீசன் : தமிழக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ஜெகதீசன் ஏற்கனவே சென்னை அணிக்காக அறிமுகமாக விளையாடி இருந்தாலும் முன்னணி வீரர்கள் விளையாடி வருவதால் வாய்ப்பு இல்லாமல் வெளியில் அமர்ந்து வருகிறார். இவரது பெயரும் துவக்க வீரருக்கான போட்டியில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Nishanth

ஹரி நிஷாந்த் : இடதுகை துவக்க வீரரான இவர் ஏற்கனவே சென்னையில் நடைபெற்று முடிந்த டிஎன்பிஎல் தொடரில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இவரும் சி.எஸ்.கே அணிக்காக இதுவரை விளையாடியதில்லை. இதன் காரணமாக அவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் அவரால் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement