நேற்றைய சி.எஸ்.கே அணிக்கெதிரான போட்டியில் ரோஹித் விளையாடாததற்கு – காரணம் இதுதான்

Rohith-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகம் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ரோஹித் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால் நிச்சயம் இந்த தொடரிலும் சிறப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் நேற்று பொல்லார்டு டாஸ் போட வந்ததைக் கண்டதும் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.

cskvsmi-1

- Advertisement -

மேலும் டாஸ் போட்ட பிறகு ரோகித் சர்மா அணியில் இல்லை என்று தெரிந்ததும் அனைவருக்கும் இந்த விஷயம் சற்று அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். இந்நிலையில் நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா விளையாடாததற்கு காரணம் யாதெனில் : ஏற்கனவே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்யும்போது பல காயங்களை ரோகித்சர்மா எதிர்கொண்டார்.

அந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் அவர் பீல்டிங் செய்ய கூட வரவில்லை என்பது நாம் அறிந்ததே. அதன்பிறகு அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில தொந்தரவுகள் இருந்தது. அதுமட்டுமின்றி அடுத்த மாதம் டி20 உலகக்கோப்பை வருவதால் முன்னெச்சரிக்கை காரணமாக இந்த போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

Rohith-5

மேலும் காயம் அதிகரிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த போட்டியில் அவர் முன்னெச்சரிக்கை காரணமாக ஓய்வு எடுத்துக்கொண்டார். இது குறித்து பேசிய மும்பை அணியின் தற்காலிக கேப்டன் பொல்லார்ட் கூறுகையில் : ரோகித் நலமாகத்தான் உள்ளார். விரைவில் அவர் அணிக்குத் திரும்புவார். நான் இன்றைய போட்டிக்கு மட்டும்தான் கேப்டன் என்று டாஸ் நிகழ்வின் போது தெளிவாக தெரிவித்திருந்தார்.

rohith

இதன் காரணமாக ரோஹித்திற்கு பெரிய காயம் ஏற்படவில்லை என்றாலும் காயத்தின் தன்மை பெரியதாக கூடாது என்பதற்காக இந்த போட்டியில் இருந்து ரோஹித் விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement