கே.எல் ராகுல் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் நியூசிலாந்து தொடரிலிருந்து விலக காரணம் இதுதான் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

Axar-and-KL
- Advertisement -

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரானது ஜனவரி 15-ஆம் தேதி நாளை நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியுடன் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து உடனடியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

INDvsNZ

- Advertisement -

இந்த இரண்டு தொடர்களுக்குமான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ அதிகாரவபூர்வமாக தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு விட்டது. இந்த ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இரண்டு அணிகளிலும் துவக்க வீரர் கே.எல் ராகுல் மற்றும் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் இடம் பெறவில்லை.

சமீப காலமாகவே மிக சிறப்பாக செயல்பட்டு வரும் அக்சர் பட்டேல் அணியில் இடம் பெறாதது குறித்து பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அக்சர் பட்டேல் மற்றும் கே.எல் ராகுல் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஏன் இடம்பெறவில்லை என்பது குறித்தும் பிசிசிஐ தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளது. அதன்படி பிசிசிஐ பதிவிட்டுள்ள அந்த கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது :

Kuldeep Yadav Ind Shubman gill kl rahul

இந்திய அணியின் வீரர்களான கே.எல் ராகுல் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் விளையாட முடியவில்லை. அவர்கள் இருவருமே தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதனால் அவர்கள் இந்த நியூசிலாந்து தொடரில் இடம் பெறவில்லை என பி.சி.சி.ஐ தெளிவாக தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதன் பின்னர் இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடருக்கான அணியில் மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர். இதில் அக்சர் படேல் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விடுப்பு எடுத்து சென்றுள்ளார் என்றும் கே.எல் ராகுல் தனது திருமணத்திற்காக தான் விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : பிஎஸ்எல் தொடரிலும் ஐபிஎல் தொடரிலும் ஏணி வெச்சாலும் எட்டாத 5 வெளிநாட்டு வீரர்களின் சம்பளம்

ஏனெனில் ஏற்கனவே அண்மையில் வெளியான ஒரு தகவலின்படி பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டியை ராகுல் திருமணம் செய்ய இருக்கிறார் என்றும் அவர்களது திருமணம் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்பட்ட வேளையில் தற்போது அதற்கு ஏற்றார்போல் அணியில் இருந்து வெளியேறி உள்ளதால் கே.எல் ராகுல் நிச்சயம் திருமணம் செய்து கொண்டு மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது.

Advertisement