முதல் போட்டியில் அசத்திய ராயுடு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடததன் காரணம் இதுதான் – தோனி விளக்கம்

- Advertisement -

ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி வழக்கம் போலவே முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 216 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்களில் (9 சிக்ஸர் 1 பவுண்டரி) , ஸ்டீவ் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்களும் (4 சிக்ஸர் 4 பவுண்டரி) குவித்தனர். அதற்கடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் டூபிளெஸ்ஸிஸ் தவிர மற்ற யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

37 பந்துகளை சந்தித்த டூபிளெஸ்ஸிஸ் 7 சிக்சர் ஒரு பவுண்டரி என 72 ரன்கள் குவித்தார். துவக்க வீரர் வாட்சன் 33 ரன்களும், இறுதி நேரத்தில் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசிய தோனி 29 ரன்களும் குவித்தனர். இதனால் சென்னை அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

Samson-1

இந்நிலையில் இந்தப் போட்டியில் அம்பத்தி ராயுடுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் அறிமுக வீரராக களமிறங்கினார். ஆனால் முதல் போட்டியில் பெரிய அளவில் ரன்களை குவித்த அனுபவ வீரரான ராயுடு இல்லாதது இந்த போட்டியில் சென்னை அணிக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில் அறிமுகவீரராக களமிறங்கிய கெய்க்வாட் முதல் பந்தில் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். இந்நிலையில் இந்தப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன் நடைபெற்ற டாஸ் நிகழ்வின் போது ராயுடு ஏன் இந்த போட்டியில் விளையாடவில்லை என்பது குறித்து தோனி பேசியிருந்தார்.

Dhoni

இதுகுறித்து அவர் கூறுகையில் : எங்கள் பிளேயிங் லெவனில் இன்று ஒரு மாற்றம் இருக்கிறது ராயுடு 100% பிட்டாக இல்லாததால் அவருக்கு பதிலாக கெய்க்வாட் விளையாடுகிறார் என்று தெரிவித்தார். இதனால் ராயுடுவுக்கு ஏதோ உடல்நலப் பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அடுத்த போட்டியில் அவர் தயாராகி மீண்டும் அணியில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement