சிறப்பாக பந்துவீச தெரிந்த எனக்கு இது ரொம்ப கடினமாக இருக்கிறது – தாஹீர் பேட்டி

Tahir 1
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தோனி 46 பந்துகளில் 75 ரன்களை குவித்தார்.

rahane

- Advertisement -

அடுத்து 176 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் திரிபாதி மற்றும் ஸ்டோக்ஸ் தவிர மற்ற யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பேட்டிங் செய்யவில்லை. ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி சென்ற ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் பிராவோவின் அபாரமான பந்துவீச்சினால் 167 ரன்கள் மட்டுமே குவித்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிரடியாக ஆடிய தோனி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டிக்கு பிறகு பேசிய தாஹீர் : இந்த தருணத்தை நான் சிறப்பாகவும், பெருமையாகவும் நினைக்கிறன். என்னால் இந்த போட்டியில் என் அனுபவத்தின் மூலம் சிறப்பாக பந்துவீச முடிந்தது. ஆனால், மைதானத்தில் இருந்த பனிபொழிவினால் பந்து சற்று ஈரமாக இருந்ததால் சற்று சிரமப்பட்டேன். நான் சிறப்பாக பந்துவீசுவேன். ஆனால், கேட்ச் பிடிக்கும்போது சற்று பதட்டம் இருக்கிறது. முதல் போட்டியின் போது கேட்சை தவறவிட்டேன். மேலும், இதுபோன்ற தவறுகளை செய்யாமல் இருக்க கேட்ச் பயிற்சி எடுத்து வருகிறேன்.

Tahir

நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசிய தாஹீர் 4 ஓவர்களில் 23 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது வரை இந்த வருட ஐ.பி.எல் தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பர்புல் கேப்பினை தாஹீர் அவர் வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement