IND vs WI : ரோஹித் இடத்தில் பொறுப்புடன் பேட்டிங் செய்தது மகிழ்ச்சியா இருக்கு – ஆட்டநாயகன் விருது வென்றபின் சூரியக்குமார் பேசியது இதோ

Suryakumar-Yadav
- Advertisement -

செயின்ட் கிட்ஸ் & நேவிஸில் நகரிலுள்ள வார்னர் பார்க் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதிய 3-வது டி20 போட்டி ஆகஸ்ட் 2-ஆம் தேதியான நேற்று இரவு நடைபெற்று முடிந்தது. தாமதமான லக்கேஜ் வருகையால் இப்போட்டியும் ஒன்றரை மணி நேரம் தாமதமாக இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு துவங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு தொடக்க வீரர் பிரண்டன் கிங் 57 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 20 (20) ரன்களில் அவுட்டானார்.

Avesh Khan IND vs WI

- Advertisement -

அந்த சமயத்தில் களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 22 (23) ரன்களில் நடையை கட்டினாலும் மறுபுறம் 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் அரைசதம் அடித்து 73 (50) ரன்களை வெளுத்து வாங்கிய மற்றொரு தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 17-வது ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசியில் ரோவ்மன் போவல் 23 (14) ரன்களும் சிம்ரோன் ஹெட்மையர் 20 (12) ரன்களும் எடுத்து ஓரளவு நல்ல பினிஷிங் கொடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 164/5 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

மிரட்டிய ஸ்கை:
அதைத் தொடர்ந்து 165 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா 11* (5) ரன்களை அதிரடியாக எடுத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட முதுகு பிடிப்பு காரணமாக பெவிலியன் திரும்பியது ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் சூர்யகுமார் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அற்புதமாக எதிர்கொண்டு அதிரடியாக ரன்களை சேர்த்தார்.

107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்திய இந்த ஜோடியில் கடைசிவரை பொறுமையாகவே விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் 24 (27) ரன்களில் நடையை கட்டினார். ஆனால் மறுபுறம் 8 பவுண்டரி 4 சிக்சர்களை வெளுத்து வாங்கிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து 76 (44) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். அவரது அற்புதமான ஆட்டத்தால் கடைசியில் ரிஷப் பண்ட் 33* (26) ரன்களும் தீபக் ஹூடா 10* (7) ரன்களும் எடுத்து தேவையான பினிஷிங் கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 19 ஓவரிலேயே 165/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்று முதல் 2 போட்டிகளின் முடிவில் சமநிலையில் இருந்த இந்த தொடரில் 2 – 1* (5) என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. முன்னதாக கடந்த போட்டியில் வெறும் 138 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்த இந்தியாவுக்கு இம்முறை 165 ரன்களை துரத்தும்போது கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே காயத்தால் வெளியேறியது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

Suryakumar-Yadav

பொறுப்பான சூர்யா:
இருப்பினும் அவர் இல்லாத சமயத்தில் பொறுப்புடன் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்றார். இது பற்றி போட்டி முடிந்த பின் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “எனது இன்னிங்ஸ் சென்ற விதத்தில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக ரோகித் சர்மா போன்ற முக்கியமான வீரர் ஆரம்பத்திலேயே பெவிலியன் திரும்பியதும் 15 – 17 ஓவர்கள் பேட்டிங் செய்வது மிகவும் முக்கியமானதாகும்”

- Advertisement -

“அதை நேற்றைய 2-வது போட்டியின் 2-வது இன்னிங்சில் எங்களின் பேட்டிங்கில் பார்த்தோம். எனவே இப்போட்டியை கடைசி வரை ஒருவர் எடுத்துச்சென்று வெற்றி பெற்று கொடுப்பது மிகவும் முக்கியமாகும், அதில் தான் நானும் கவனம் செலுத்தினேன். அந்த தருணங்களில் எனக்கு நானே நம்பிக்கையை கொடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்தேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs WI : சூர்யாவை விட அதை சரியாக செய்ததால் தான் வென்றோம் – வெற்றிக்குப்பின் பேசிய ரோஹித் தனது காயம் பற்றி கொடுத்த அப்டேட்

ஆகஸ்ட் 1-ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானது மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி அடுத்து வந்த பேட்ஸ்மேன்களையும் பெரிய ரன்களை எடுக்க விடாமல் தோல்வியை பரிசளித்தது. எனவே அதை மனதில் வைத்துக் கொண்டதாக தெரிவிக்கும் சூர்யகுமார் யாதவ் இப்போட்டியிலும் அதேபோல் ரோகித் சர்மா ஆரம்பத்தில் விலகிய நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்ததற்கு பரிசாக வெற்றி கிடைத்ததாக பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

Advertisement