IND vs NZ : சாத்தியமா நான் பண்ணது தப்புதான். அதை நானே ஒத்துக்குறேன் – ஆட்டநாயகன் சூரியகுமார் பேட்டி

Suryakumar Yadav
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலாவதாக நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இழந்த வேளையில் தற்போது டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றிருந்த வேளையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

IND-vs-NZ

- Advertisement -

இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனாலும் மைதானத்தின் தன்மையை சுதாரிக்க முடியாமல் இந்திய அணியிடம் வசமாக சிக்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூரியகுமார் யாதவ் 31 பந்துகளில் 26 ரன்கள் குவித்த இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தன்னுடைய ஆட்டம் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ் கூறுகையில் :

IND vs NZ Hardik Pandya

இன்றைய போட்டியில் நான் விளையாடிய விதம் மிகவும் வித்தியாசமாகவே இருந்தது. ஏனெனில் மைதானத்தில் உள்ள சூழ்நிலையை நாம் கருத்தில் கொண்டு விளையாட வேண்டியது அவசியம். அந்த வகையில் நான் இன்று பேட்டிங் செய்ய களமிறங்கும் போது மைதானத்தின் தன்மை சற்று வித்தியாசமாக இருந்தது. அதனால் இறுதி வரை கொண்டு சென்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement -

வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழந்ததும் நிச்சயம் ஒருவர் கடைசி வரை நிக்க வேண்டும் என்பதனாலேயே நான் இறுதிவரை களத்தில் நின்றேன். வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழந்தது முற்றிலுமாக என்னுடைய தவறுதான். அது கண்டிப்பாக ரன் கிடையாது. ஆனால் நான் பந்து எங்கு சென்றது என்று கவனிக்காமலே கண் மூடித்தனமாக ஓடி வந்து அவர் ஆட்டமிழக்க காரணமாக அமைந்தேன். இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது.

இதையும் படிங்க : IND vs NZ : நாங்க மட்டும் அதை பண்ணியிருந்தா கண்டிப்பா ஜெயிச்சிருப்போம் – மிட்சல் சான்ட்னர் பேட்டி

முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்ஸில் பந்து அதிக அளவு திரும்பியது. எனவே பொறுமையாக இருந்து இறுதிவரை அணியை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதேபோன்று இறுதி நேரத்தில் ஹார்டிக் பாண்டியா என்னிடம் வந்து கண்டிப்பாக இந்த பந்தில் உன்னால் போட்டியை ஃபினிஷிங் செய்ய முடியும் என்று எனக்கு தைரியத்தை அளித்தார் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement