IND vs AUS : இக்கட்டான வேளையில் பேட்டிங் செய்ய எனக்கு பிடிக்கும் – காரணத்தை கூறிய சூரியகுமார் யாதவ்

Suryakumar-Yadav
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்று முடிந்த மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக டிம் டேவிட் 54 ரன்களையும், கேமரூன் கிரீன் 52 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்திய அணி சார்பாக அக்சர் பட்டேல் சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 33 ரன்களை விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

INDvsAUS

- Advertisement -

அதன் பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடி இந்திய அணியானது துவக்கத்திலேயே ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தது. அதன் பின்னர் எப்படி இந்த சரிவிலிருந்து மீளப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மூன்றாவது விக்கெட் 104 ரன்கள் சேர்த்து சூரியகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஜோடியானது அசத்தியது.

அதிலும் குறிப்பாக 36 பந்துகளை சந்தித்த சூரியகுமார் யாதவ் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 69 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து வெளியேறினார். கோலியும் 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க இந்திய அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் பாண்டியா 16 பந்துகளில் 25 ரன்கள் குவித்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இந்த ஆட்டத்தில் விக்கெட்டுகள் விழுந்த பின்னரும் களத்தில் இறங்கி அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவின் அற்புதமான ஆட்டம் காரணமாகவே இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

Suryakumar Yadav 1

இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இப்போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசியிருந்த சூரியகுமார் யாதவ் கூறுகையில் : இது போன்ற சூழ்நிலைகளில் நான் விரும்பி விளையாட நினைக்கிறேன். ஏனெனில் இது போன்ற இக்கட்டான வேளைகளில் என்னுடைய வாய்ப்பை எடுத்துக் கொண்டு என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

- Advertisement -

அதேபோன்று இந்த ஆட்டத்தில் என்னிடம் இரண்டு மூன்று வித்தியாசமான ஷாட்கள் இருந்தாலும் ஒரு விடயம் மட்டுமே என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. இந்த மைதானத்தில் இந்த பீல்டிங் செட்டப்பிற்கு ஏற்ப ஓவர் மிட் ஆஃப் திசையில் அடிக்க விரும்பி விளையாடினேன். என்னுடைய திட்டம் தெளிவாக இருந்தது. அதனாலே என்னால் எந்தவித சிக்கலும் இன்றி அதிரடியாக விளையாட முடிந்தது.

இதையும் படிங்க : IND vs AUS : இப்படி விளையாடுனா நாங்க எப்படி ஜெயிக்க முடியும் – தோல்விக்கு பிறகு ஆரோன் பின்ச் வருத்தம்

நான் நான்காவது இடத்தில் இறங்கி விளையாடுவதை விரும்பி செய்து வருகிறேன். அந்த இடத்தில் இறங்கி விளையாடுவது சவாலான ஒன்றுதான். ஆனாலும் கொஞ்சம் ஸ்மார்ட் ஆக விளையாடினால் உங்களது பேட்டிங் திறனை அந்த இடத்தில் வெளிப்படுத்த முடியும் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement