காயம் காரணமாக விலகிய கே.எல் ராகுலுக்கு பதிலாக மாற்றுவீரர் அறிவிப்பு – அதிகாரபூர்வ தகவல்

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவடைந்ததை அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் 25ஆம் தேதி துவங்கவுள்ளது. கான்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் கேப்டன் விராட் கோலி விளையாட மாட்டார் என்பதனால் ரஹானே இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.

IND 1

ஏற்கனவே தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடிவருவதால் பணிச்சுமை காரணமாக இந்த தொடரில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், முகமது ஷமி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்றொரு நட்சத்திர வீரரான கே.எல் ராகுலும் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இந்திய அணியில் கே.எல் ராகுலுக்கு பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி கே.எல் ராகுலுக்கு பதிலாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அணியில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளார்.

sky 1

ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த சூர்யகுமார் யாதவ் அந்த தொடரில் விளையாடவில்லை என்றாலும் 15 பேர் கொண்ட வீரர்கள் அணியில் இடம்பெற்றிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் – இந்திய அணிக்கு பின்னடைவு

இந்நிலையில் இந்த தொடரிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் நிச்சயம் அவருக்கு அறிமுகம் வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement