பர்ஸ்ட் டைம் விளையாடுனாலும் எப்படி பக்காவா விளையாடுறீங்க? அஷ்வினின் கேள்விக்கு பதிலளித்த – சூரியகுமார் யாதவ்

Ashwin-and-Suryakumar-Yadav
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாலில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து நவம்பர் 10-ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த டி20 தொடரில் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் விராட் கோலிக்கு அடுத்தபடியாக சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் இந்த தொடரில் தான் விளையாடியுள்ள ஐந்து ஆட்டங்களில் மூன்று அரை சதங்களை அடித்து அசத்தியுள்ளார். அதோடு விராட் கோலிக்கு அடுத்து இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரராகவும் சூரியகுமார் யாதவ் இருக்கிறார்.

Suryakumar YAdav

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியிலும் சூரியகுமார் யாதவ் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்நாயகன் விருதை வெல்வார் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரையிறுதி போட்டிக்கு முன்பாக தற்போது தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினுடன் சூரியகுமார் யாதவ் ஒரு பிரத்தேக பேட்டியில் கலந்து கொண்டார். அந்த பேட்டியின் போது ஏகப்பட்ட விடயங்கள் குறித்து ரவிச்சந்திரன் அஷ்வின் கேள்வி கேட்க அதற்கெல்லாம் பொறுமையாக சூரியகுமார் யாதவ் பதில் அளித்தார்.

அந்த வகையில் இந்த உரையாடலின் போது ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக விளையாடினாலும், எப்படி சிறப்பாக விளையாட முடிகிறது என்பது குறித்தும் சூரியகுமார் யாதவ் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எல்லோரும் என்னிடம் கேட்கும் விடயம் யாதெனில் இதுவரை ஆஸ்திரேலியாவில் விளையாடாத நீங்கள் இந்த வேகமான பவுண்டரி ஆடுகளங்கள் மற்றும் பெரிய மைதானத்திற்கு எப்படி உங்களை தயார் செய்து கொண்டீர்கள் என்று கேட்கிறார்கள்.

Suryakumar YAdav

அவர்களுக்கு நான் அளிக்க விரும்பும் பதில் இதுதான் : நான் மும்பை வான்கடே மைதானத்தில் நிறைய பயிற்சி செய்துள்ளேன். அங்குள்ள ஒரு ட்ராக் ஒரு சிறந்த பவுன்ஸ் மற்றும் வேகமான இயல்புடையது. அங்கு நான் நிறைய பிராக்டிஸ் செய்துள்ளதால் ஆஸ்திரேலியா போன்ற பவுன்சி மற்றும் பெரிய ஆடுகளங்களில் என்னால் எளிதாக விளையாட முடிகிறது. அதுமட்டுமின்றி இது போன்ற பெரிய ஆடுகளங்களில் நான் பேட்டிங் செய்வதை மிகவும் ரசிக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் பெரிய இடைவெளிகளை பார்த்தால் அங்கு பந்தை விரட்டுவது எனக்கு எளிதாக இருக்கிறது. அதோடு தேவைப்பட்டால் பந்தை கேப்புகளில் அடித்து விட்டு ரன்களை ஓடி எடுக்கவும் நான் தயாராக உள்ளேன். அதன் காரணமாகவே என்னால் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாட முடிகிறது என்று சூரியகுமார் யாதவ் கூறினார்.

இதையும் படிங்க : ரோஹித்தின் காயம் : நீங்க நெனச்ச மாதிரியெல்லாம் இல்ல – வெளியான உறுதியான அறிக்கை

மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : நான் எனது பேட்டிங்கை இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரசித்து விளையாடி வருகிறேன். எனது சிறப்பான பேட்டிங்கை நான் வெளிப்படுத்தும்போது அதில் அணியும் வெற்றி பெற்றால் எனக்கு கூடுதல் நம்பிக்கை வருகிறது என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement