ரோஹித்தின் காயம் : நீங்க நெனச்ச மாதிரியெல்லாம் இல்ல – வெளியான உறுதியான அறிக்கை

Rohit-Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்ற இந்திய அணியானது 5 போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்று குரூப் இரண்டில் முதலாவது இடம் பிடித்து அரையிறுதி சுற்றிற்கு தகுதி பெற்றது. அதனை தொடர்ந்து வரும் நவம்பர் 10-ஆம் தேதி நாளை மறுதினம் அடிலெயிடு மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியானது இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது.

இந்நிலையில் அடிலெயிடு மைதானத்திற்கு சென்றுள்ள இந்திய வீரர்கள் அங்கு இந்த அரையிறுதி போட்டிக்காக தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அடிலெயிடு மைதானத்தில் வலைப் பயிற்சி மேற்கொண்டு இருந்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா வலைப் பயிற்சியின்போது த்ரோ டவுன் ஸ்பெசலிஸ்ட் ரகு வீசிய பந்தில் முழங்கையில் காயம் அடைந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக வலைப்பயிற்சியின் பாதியிலிருந்து வெளியேறிய அவர் அரையிறுதியில் விளையாடுவது சந்தேகம் என்று காலை முதல் ஏகப்பட்ட செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரோகித்துக்கு ஏற்பட்ட காயம் பயப்படக்கூடிய அளவில் இல்லை என்றும் அவருக்கு ஐஸ் பேக் உதவியுடன் ஒத்தடம் வைக்கப்பட்டு தற்போது மீண்டும் ரோஹித் வலைப்பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவார் என்று உறுதியான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்ட உடனே அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் அவரால் அரையிறுதி போட்டியில் பங்கேற்க முடியாது என்றும் அவர் அரையிறுதி போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் என்றும் பல செய்திகள் வெளியாகி சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து வந்தது.

- Advertisement -

இவ்வேளையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பூரண குணம் அடைந்து மீண்டும் பிராக்டிஸ் செஷனை முடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் கட்டாயம் அரையிறுதி போட்டியில் ரோஹித் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை வரலாற்றில் மிகவும் மெதுவாக விளையாடிய இந்திய வீரர்களின் டாப் 3 இன்னிங்ஸ் பட்டியல்

அரையிறுதி போட்டிக்கு இன்னும் 48 மணி நேரமே மீதமுள்ள வேளையில் ரோகித் சர்மாவின் காயம் குறித்தான தகவல் வெளியாகி அனைவரையும் வருத்தமடைய செய்த வேளையில் தற்போது ரோஹித் பூரண நலத்துடன் ப்ராக்டீஸை முடித்துள்ளார் என்ற தெளிவான தகவல் தற்போது வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் நிம்மதியாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement