கடைசி போட்டியிலுமா இப்படி பண்ணுவீங்க? சூரியகுமார் யாதவின் முடிவால் ஏமாற்றத்தை சந்தித்த – 2 வீரர்கள்

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது பெங்களூரு மைதானத்தில் டிசம்பர் 3-ஆம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த முதல் நான்கு ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசதியுள்ளது.

இவ்வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மழையால் பாதிக்கப்படுமா என்று பயந்த வேளையில் சரியான நேரத்தில் துவங்கியது. இந்நிலையில் இந்த ஐந்தாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றியுள்ளதால் நிச்சயம் இந்த போட்டியில் பெஞ்சில் அமர்ந்திருக்கும் சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்றைய போட்டியின் டாசிற்கு பிறகு பேசிய சூரியகுமார் யாதவ் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் செய்துள்ளதாக அறிவித்தார். அதுவும் கடந்த போட்டியில் விளையாடிய தீபக் சாகர் மட்டும் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் மீண்டும் அணியில் இணைந்துள்ளதாக அறிவித்தார்.

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியிலாவது தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிவம் துபே ஆகிய இருவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவுக்கு ஆணவம், அவப்பெயரை கொடுத்த வார்னருக்கு எதுக்கு மரியாதை? ஜான்சன் விளாசல்

ஏற்கனவே இந்த தொடரினை இந்திய அணி கைப்பற்றியதால் நிச்சயம் கடைசி போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் பெரிய அளவில் மாற்றத்தை செய்யாமல் சூரியகுமார் யாதவ் அதிரடி முடிவினை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement