மிகப்பெரிய காயத்தை சந்தித்த சூரியகுமார்.. கம்பேக் பற்றிய அறிவிப்பால் 2024 டி20 உ.கோ முன் இந்தியாவுக்கு பின்னடைவு

Suryakumar Yadav
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையில் சமன் செய்த இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை கேஎல் ராகுல் தலைமையில் வென்றது. இதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் கொண்ட இந்திய அணி விளையாட உள்ளது.

முன்னதாக நடைபெற்ற டி20 தொடரில் 3வது போட்டியில் அபாரமாக விளையாடிய கேப்டன் சூரியகுமார் யாதவ் தென்னாபிரிக்க மண்ணில் சதமடித்த முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனை படைத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதனால் தோல்வியை தவிர்த்த இந்தியா 1 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை பகிர்ந்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது.

- Advertisement -

காயத்தின் நிலைமை:
இருப்பினும் ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் ஃபீல்டிங் செய்யும் போது தன்னுடைய காலில் மிகப்பெரிய பிசைவு காயத்தை சந்தித்த சூரியகுமார் யாதவ் நடக்க முடியாமல் தடுமாறினார். அதனால் பயிற்சியாளர்கள் தோள்பட்டையில் தூக்கிக் கொண்டு சென்ற நிலையில் போட்டியின் முடிவில் ஓரளவு நடந்து வந்த சூரியகுமார் யாதவ் விரைவில் குணமடைந்து விடுவேன் என்று பேட்டியில் தெரிவித்தார்.

இந்நிலையில் போட்டியை முடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று செய்த சோதனையில் காணுகாலில் கிரேட் 2 டியர் காயத்தை சூரியகுமார் யாதவ் சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் குறைந்தபட்சம் வரும் 2024 பிப்ரவரி மாதம் வரை அவர் எவ்விதமான போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று தெரிய வருவது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைய உள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 போட்டிகளில் சரமாரியாக அடித்து நொறுக்கி வரும் அவர் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். இருப்பினும் காயத்தால் வரும் ஜனவரி மாதம் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக சொந்த மண்ணில் நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் தொடரில் அவர் விளையாட மாட்டார் என்பது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்த உள்ளது.

இதையும் படிங்க: 98க்கு ஆல் அவுட்.. மண்ணை கவ்விய நியூசிலாந்து 2 மோசமான சாதனை.. மாபெரும் வரலாறு படைத்த வங்கதேசம்

தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் லண்டனில் இருக்கும் சூரியகுமார் தம்முடைய காலில் சிகிச்சைக்காக பெரிய கட்டுகளை போட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே பிப்ரவரிக்கு பின் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் குணமடைந்து 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட சூரியகுமார் யாதவ் தயாராக வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement