வேற்று கிராகவாசி மாதிரி அடிக்கிறாரு, அவர அவுட் செய்தது ரொம்ப கஷ்டம் – வாசிம் அக்ரம் புகழாரம்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் நடைபெற்று முடிந்துள்ள சூப்பர் 12 சுற்றின் முடிவில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பங்கேற்ற 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு சென்றுள்ளது. அதைத் தொடர்ந்து வரும் நவம்பர் 10ஆம் தேதியன்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் களமிறங்கும் இந்தியா பைனலுக்கு செல்ல போராட உள்ளது. முன்னதாக ஜிம்பாப்வேவுக்கு எதிராக களமிறங்கிய தன்னுடைய கடைசி சூப்பர் 12 போட்டியில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.

Suryakumar YAdav

- Advertisement -

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் பேட்டிங் துறையில் அபாரமாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 61* (25) ரன்களை விளாசி வெற்றியில் முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதிலும் நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 15, விராட் கோலி 13, ரிஷப் பண்ட் 3, ஹர்திக் பாண்டியா 18 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் கேஎல் ராகுல் 51 (35) ரன்கள் எடுத்தும் 15 ஓவர்களில் இந்தியா 107/4 என்ற நிலைமையுடன் தடுமாறியது.

வேற்று கிரக அடி:
ஆனால் கடைசி நேரத்தில் இரு மடங்கு அதிரடியாக செயல்பட்ட அவர் கடைசி 5 ஓவரில் இந்தியாவை 69 ரன்கள் குவிக்க வைத்து மிகச் சிறந்த பினிஷராகவும் செயல்பட்டார். அதை விட நேற்றைய போட்டியில் ஒய்ட் போல வந்து பந்துகளை கூட பின்னங்காலில் நின்று அசால்டாக மடக்கி அடித்து அவர் பறக்க விட்ட சிக்சர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த வகையில் ஏற்கனவே இந்திய ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் ஏன் தம்மை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றழைக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக சூரியகுமார் நேற்று செயல்பட்டார்.

Suryakumar Yadav 1

முன்னதாக தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் இதே போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மனாக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை முந்தியுள்ள அவர் இந்த வருடம் 1000* ரன்களை குவித்த முதல் வீரராகவும் உலக சாதனை படைத்துள்ளார். அப்படி ஆச்சரியப்படும் வகையில் அட்டகாசமாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் வேற்று கிரகத்தில் இருந்து வந்தது போல் எப்படி போட்டாலும் அடிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக பெரும்பாலும் பின்னங்காலில் நின்று விளையாடுவதால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டை விட டி20 கிரிக்கெட்டில் அவரை அவுட் செய்வது கடினமென்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டில் பேசியது பின்வருமாறு. “அவர் வேற்று கிரகத்திலிருந்து வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் இதர வீரர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவராக உள்ளார். அவர் குவித்துள்ள ரன்களையும் அவர் விளையாடும் விதத்தையும் பார்ப்பதற்கு ரசனையை ஏற்படுத்துகிறது. அதே சமயம் ஜிம்பாப்வேவுக்கு எதிராக மட்டுமல்ல உலகின் தரமான டாப் பந்து வீச்சுக்கு எதிராகவும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்”

Suryakumar Yadav

“அவர் இப்படி பேட்டிங் செய்தால் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க எங்கே செல்வது? டி20 கிரிக்கெட்டில் அவரை அவுட் செய்ய எது சிறந்த வழி? அதாவது ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரை ஏதோ ஒரு வகையில் அவுட் செய்யலாம். ஆனால் டி20 கிரிக்கெட்டில் இந்த மாதிரியான பார்மில் பெரும்பாலும் பின்னங்காலில் விளையாடுவதால் அவருக்கு எதிராக பந்து வீச எந்த பவுலருக்கும் கடினமாக இருக்கும்”

இதையும் படிங்க : நீங்க என்னையும் மிஞ்சிட்டிங்க நண்பா – அடக்கமாக பேசிய சூர்யகுமாரை பாராட்டிய ஏபிடி பேசியது என்ன?

“அனேகமாக முந்தைய போட்டியில் அவருக்கு எதிராக பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். அவரை ஷார்ட் பிட்ச் பந்துகளை வைத்து பாகிஸ்தான் பவுலர்கள் தாக்கினார்கள். ஒருவேளை அது தான் அவரது விக்கெட்டை எடுக்கும் வழியாக இருக்கலாம்” என்று கூறினார். முன்னதாக 360 டிகிரி என்பதையும் தாண்டிய செயல்பாடுகளை சூரியகுமார் வெளிப்படுத்துவதாக தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement