யார்கிட்டயும் சொல்லாம நீ மட்டும் கிளம்பி வா.. ரெய்னாவிற்கு தோனி விடுத்த அழைப்பு – 13 ஆண்டு ரகசியத்தை பகிர்ந்த ரெய்னா

Dhoni-and-Raina
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியும், முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது நம்மில் பலரும் அறிந்த விடயம் தான். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகள் ஒன்றாக விளையாடிய தோனி மற்றும் ரெய்னா சென்னை அணிக்காகவும் கேப்டனாகவும், துணை கேப்டனாகவும் பல ஆண்டுகள் ஒன்றாக விளையாடி உள்ளனர். இருவருக்கும் இடையேயான நட்பு என்பது மிகவும் பலமான ஒன்றாகவே இருந்தது.

அதன் காரணமாகவே தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்த அதே நாள் அன்று சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வினை அறிவித்திருந்தார். மேலும் சுரேஷ் ரெய்னா எப்போது தோனி குறித்து பேசினாலும் மிகவும் பெருமையாகவே நட்பை பாராட்டி தனது கருத்துக்களை வெளிப்படுத்துவார்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது 13 ஆண்டு கால சுவாரஸ்ய சம்பவம் குறித்த சில விடயங்களை சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் தோனி அவரது திருமணத்திற்கு தன்னை எவ்வாறு அழைத்தார்? என்பது குறித்து சுரேஷ் ரெய்னா பேசியுள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தோனி தன்னை அவரது திருமணத்திற்கு அழைத்தது குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா கூறுகையில் : ஒரு நாள் எனக்கு தோனி போன் செய்து நீ எங்கிருக்கிறாய்? என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் : லக்னோவில் என்னுடைய வீட்டில் இருப்பதாக கூறினேன். அதன்பிறகு அவர் : டேராடூனில் எனக்கு திருமணம் நடக்க உள்ளது.

- Advertisement -

“நீ யாரிடம் சொல்லாமல் சீக்கிரம் கிளம்பி வா”, “உனக்காக காத்திருக்கிறேன்” என்று போனை கட் செய்து விட்டார். பிறகு நான் உடனடியாக என்னுடைய சாதாரண உடைகளை எடுத்துக் கொண்டு டேராடூன் சென்று அடைந்தேன். அதன் பின்னர் தோனி அவருக்காக வைத்திருந்த உடைகளை எடுத்து நான் அணிந்து கொண்டு தான் அவரது திருமணத்தில் பங்கேற்றேன் என்று தோனியின் திருமணத்தில் நடந்த நிகழ்வு குறித்து சுரேஷ் ரெய்னா சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியா – தெ.ஆ முதல் டெஸ்ட் நடைபெறும் சென்சூரியன் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

கடந்த 2010-ஆம் ஆண்டு சாக்ஷியை காதல் திருமணம் செய்த தோனி எந்த ஒரு இந்திய வீரருக்கும் அழைப்பு விடுக்காத வேளையில் தனது நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னாவை மட்டுமே அழைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. என்னதான் பெரிய பிரபலமாக இருந்தாலும் தனது சொந்த விடயங்களை தோனி பெரியளவில் பொதுவெளியில் வெளிக்காட்ட விரும்பாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement