இவர் மட்டும் அடுத்த ஐ.பி.எல் ல விளையாடலனா நானும் விளையாடமாட்டேன் – அதிரடியான பதிலளித்த ரெய்னா

Raina
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக செப்டம்பர் அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 31 போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இவ்வேளையில் சென்னையில் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா இந்த தொடரில் பங்கேற்று விளையாடுவேன் என்று உறுதியளித்துள்ளார்.

Raina

- Advertisement -

மேலும் தான் எப்போது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவேன் என்பது குறித்தும் அவர் ஒரு தனியார் தொலைக்காட்சியின் நேரலையில் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் பட்சத்தில் தோனியை நான் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுமாறு கூறுவேன்.

அடுத்த ஐபிஎல் தொடருக்கு இந்த தொடர் முடிந்து மூன்று நான்கு மாதங்கள் மட்டுமே இடைவெளி இருப்பதால் கட்டாயம் என்னால் தோனியை சமாதானம் செய்ய முடியும். ஒருவேளை தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று கூறிவிட்டால் நானும் அவரோடு சேர்ந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று தனது பதிலை அதிரடியாக அளித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ஓய்வு அறிவித்த போது அவருடன் இணைந்து தானும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

Raina-2

சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் 2008ஆம் ஆண்டு முதல் சென்னை அணியில் தோனியுடன் இணைந்து ஆடி வரும் சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் முக்கிய வீரராகவும், ரசிகர்கள் மத்தியில் சின்னத் தல என்றும் பெயர் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது தோனி விளையாடாமல் போனால் தானும் விளையாட மாட்டேன் என்று கூறியுள்ளது அவர்களுக்கிடையேயான நட்பையும், உறவையும் வெளிக்காட்டும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement