கருண் நாயர் மட்டுமா? நிதிஷ் ரெட்டி மாதிரி அந்த 2 பேருக்கும் சீக்கிரம் சான்ஸ் கொடுங்க.. ரெய்னா கோரிக்கை

Suresh Raina 2
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் அந்தத் தொடரில் இந்திய அணி தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அந்த தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதே போல கருண் நாயர் அந்த அணியில் தேர்ந்தெடுக்கப்படாததும் ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில் 2025 விஜய் ஹசாரே கோப்பையில் அவர் முதல் 7 போட்டிகளில் 6 முறை அவுட்டாகாமல் 5 சதங்கள் உட்பட 752 ரன்களை குவித்து அசத்தினார். அப்படி உச்சகட்ட ஃபார்மில் இருந்தும் அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து தொடரில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

கருண் நாயர் வாய்ப்பு:

இந்நிலையில் கருண் நாயர் மட்டுமின்றி நித்திஷ் ரெட்டி, சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கும் ஒருநாள் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது இல்லாவிட்டாலும் விரைவில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் ரெய்னா தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“700 ரன்களை அற்புதமான சராசரியில் பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்த கருண் நாயரின் அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன். அவருடைய பெயர் தேர்வின் போது விவாதிக்கப்பட்டு இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அடுத்ததாக நிறைய போட்டிகள் நடைபெற உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 ரன்கள் அடித்தும் அவர் துரதிஷ்டவசமாக நீக்கப்பட்டார்”

- Advertisement -

நிதிஷ், சூரியகுமார்:

“ஆனால் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்புவதை அவர் உள்ளூரில் விளையாடி நன்றாக செயல்பட்டு காண்பிக்கிறார். எனவே வருங்காலங்களில் அவருக்கு தேர்வாளர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள் என்று கருதுகிறேன். ஆனால் தற்போதைய அணியில் சூரியகுமார் யாதவ் இல்லை. நித்திஷ் ரெட்டியை பற்றியும் யாரும் பேசவில்லை. ஆஸ்திரேலியாவில் அவர் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்”

இதையும் படிங்க: கோலி புலி மாதிரி.. இதை செஞ்சா 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் 2019 உ.கோ ரோஹித்தை பார்க்கலாம்.. ரெய்னா கருத்து

“எந்த இடத்திலும் அவரால் பேட்டிங் செய்ய முடியும். சரியான கலவையை கொண்ட அணியை உருவாக்குவதே வெற்றிக்கான சாவியாகும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இம்முறை கடினமாக இருக்கும். ஏனெனில் அவர்கள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தினார்கள். எனவே சரியான பிளேயிங் லெவனை உருவாக்குவது மிகவும் முக்கியம்” என்று கூறினார்.

Advertisement