ஐபிஎல்-லில் நான் தான் கில்லி என நிரூபிக்கப்போகும் ரெய்னா..! – எதில் தெரியுமா..?

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் அவரது சாதனையை இந்த ஐபிஎல் தொடரில் முறியடித்துள்ளார் சென்னை அணியில் விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா.
Suresh raina
ஐ.பி.எல் தொடர் இது வரை 10 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 11 வது சீசன் நடந்து வருகிறது. இன்னும் 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இதுவரை நடந்து முடிந்த அணைத்து ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரர் பட்டியலில் இழந்த தனது முதல் இடத்தை மீண்டும் பிடித்துவிட்டார் ரெய்னா. இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கிய போது ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த பட்டியலில் முதல் இடத்தில இருந்தார் ரெய்னா.

ஆனால் இந்த ஆண்டு நடந்து வந்த ஐபிஎல் போட்டிகளில் ரெய்னா சரியாக விளையாடாததால் அவரது இடத்தை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி ஆக்கரமித்துக் கொண்டார். ஆனால் கடந்த செய்வாய் கிழமை (மே 22) அன்று நடந்த ஹைட்ரபாத்திற்கு எதிரான போட்டியில் 22 ரன்களை குவித்ததன் மூலம் ரெய்னா 4953 ரன்களை பெற்று, அதிக ரன்களை குவித்த பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதனால் முதல் இடத்தில் இருந்த கோலி 4493 ரன்களுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
Raina

- Advertisement -

இந்நிலையில் ரைனா மற்றுமொரு சாதனையை படைக்கவுள்ளார், வரும் ஞாயிற்று கிழமை நடக்கவுள்ள இறுதி போட்டியில் ரெய்னா 47 ரன்களை குவித்தால் ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்களை கடக்கும் முதல் வீரர் என்ற சாதனை பட்டியலில் இடம்பிடிப்பார்.

Advertisement