பிரச்சனை எல்லாம் முடிந்து பயிற்சிக்கு திரும்பிய சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வீரர் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Raina
- Advertisement -

இந்தியாவில் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி 14வது ஐபிஎல் சீசன் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இந்த தொடர் இந்த வருடம் இந்தியாவில் முழுவதும் நடைபெறும் என்பதால் ரசிகர்கள் இடையே இந்த தொடர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ரசிகர்கள் ஐபிஎல் துவக்க நாளுக்காக தற்போது காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் மார்ச் மாத துவக்கத்திலேயே சென்னை சிஎஸ்கே அணியின் வீரர்கள் தோனியின் தலைமையில் சென்னையில் பயிற்சி மேற்கொண்டனர். மேலும் கடந்த ஆண்டு பிளேஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணி இம்முறை இந்தியாவில் மீண்டும் தங்களது பழைய ஆட்டத்திற்கு திரும்பும் வகையில் தற்போது தயாராகி வருகிறது.

சென்னை அணியின் முன்னணி வீரர்களான தோனி, ராய்டு, ஜெகதீசன் மற்றும் பல இளம் வீரர்கள் சென்னையில் பயிற்சியை முடித்துவிட்டு தற்போது மும்பை சென்றுள்ளனர். மும்பையிலேயே சென்னை அணிக்கு பெரும்பாலான போட்டிகள் இருப்பதால் அங்கு சென்று பயிற்சியை தொடங்க உள்ளனர். இந் நிலையில் தற்போது சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சென்னை அணியின் சின்னத் தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா பயிற்சிக்கு திரும்பி இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போஸ்டர் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Raina

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்று அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாக இந்தியா திரும்பிய அவர் அந்த தொடரில் பங்கேற்கவில்லை இந்நிலையில் மீண்டும் தான் இந்த வருடம் சிஎஸ்கே அணியில் விளையாடுவதை ஆவலோடு எதிர்நோக்கியிருந்த ரெய்னா தற்போது பயிற்சிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Raina

மேலும் கடந்த ஆண்டு மிடில் ஆர்டரில் ரெய்னா இல்லாதது பெரும் பலவீனமாக இருந்த நிலையில் தற்போது சென்னை அணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது அணி நிர்வாகத்தையே ஒரு நல்ல சூழலை உருவாக்கியுள்ளது. மேலும் தோனியின் தலைமையில் இவர் பயிற்சியில் ஈடுபட்டு அவர்கள் இருவரும் போட்டியில் இறங்கும்போது பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement