இந்திய அணியின் முன்னணி வீரரும், உத்திரபிரதேசத்தை சேர்ந்த வீரருமான சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன்பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர் சமீபத்தில் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
இந்திய அணியில் மிகமுக்கியான வீரராக விளங்கி வந்த இவர் இந்திய அணி உலககக்கோப்பையை வென்ற 2007 ஆம் டி20 அணியிலும், 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பை அணியிலும் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் ரெய்னா கடைசியாக இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 2018 ஆம் ஆண்டு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக இதுவரை 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டிலிருந்து இவர் அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரராக இருக்கும் சுரேஷ் ரெய்னாவும் அவரது மனைவி பிரியங்காவிற்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு கிரேசியா ரெய்னா என்கிற ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது சின்ன தல ரெய்னாவுக்கு மேலும் ஒரு குட்டி தல பிறந்திருக்கிறார்.
ஆம் சுரேஷ் ரெய்னா மற்றும் பிரியங்கா தம்பதியருக்கு இரண்டாவதாக ஆண்பிள்ளை பிறந்திருக்கிறதாம். இந்த தகவலை சுரேஷ் ரெய்னாவின் நெருங்கிய உறவினர்கள் ட்விட்டர் பக்கத்தின் மூலம் உறுதி செய்துள்ளனர். இந்த பதிவில் வாழ்த்துக்கள் சுரேஷ் ரெய்னா மீண்டும் அப்பா ஆகியிருக்கிறார். தாயும் மகனும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
33 வயதான சுரேஷ் ரெய்னா அவர்களுக்கு இது இரண்டாவது குழந்தை என்பதனால் சின்ன தலைக்கு குட்டி தல பிறந்துவிட்டார் என்று சென்னை ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் பலரும் இணையத்தில் இந்த செய்தியை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.