பி.சி.சி.ஐ க்கு அடுத்து கோடிக்கணக்கில் பிரதமர் நிவாரண நிதி அளித்த ஐ.பி.எல் அணி – எந்த அணி தெரியுமா ?

IPL
- Advertisement -

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக உலக நாடுகள் கடுமையாக போராடி வருகிறது. தற்போதுவரை பல்லாயிரக்கணக்கானோர் இதனால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Ind

- Advertisement -

இந்நிலையில் பல பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்களும் அரசு ஊழியர்களும் தங்களால் முடிந்த உதவியை அரசாங்கத்திற்கு செய்து வருகின்றனர். இந்த வைரஸின் தாக்கத்தை எதிர்த்து போராடுவதற்கு காக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் மக்களுக்கு உதவி செய்யவும் இந்த உதவித்தொகை பயன்படும். முன்னதாக பிசிசிஐ தலைவராக உள்ள சவுரவ் கங்குலி 50 லட்சம் ரூபாய் வழங்கினார்.

ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாராளுமன்ற எம்.பி ஆன கம்பீர் மருத்துவ உபகரங்களுக்காக 50 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். இவரை தொடர்ந்து இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார். ரோஹித் 80 லட்சம் மற்றும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஆகியோர் இணைந்து 3 கோடி வழங்கினார்கள்.

Sachin

இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா (ரூபாய் 52 லட்சம்) மற்றும் யுவராஜ் 50 லட்சம், ரஹானே 10 லட்சம் என அனைவரும் தங்களது நிதியுதவினை அரசாங்கத்திற்கு வழங்கி வருகின்றனர். மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான கவாஸ்கர் 59 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது ஐ.பி.எல் அணியான சன் ரைசர்ஸ் அணி தங்களது அணி நிர்வாகம் சார்பில் கொரோனா நிதியாக சுமார் 10 கோடி ரூபாயை அளித்துள்ளது. இதனை அந்த அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவர்களின் இந்த செயல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

SRH

ஏனெனில் இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ சார்பில் 51 கோடி ரூபாய் கொரோனா பாதிப்பு காரணமாக பிரதமர் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. அதற்கடுத்து சன் ரைசர்ஸ் அணியே பெரிய அளவில் உதவி புரிந்துள்ளது.

Advertisement