2012 மாதிரி இருக்கு.. சிறந்த பிறந்தநாள் பரிசு.. அவரோட சப்போர்ட் தான் எல்லாத்துக்கும் காரணம்.. சுனில் நரேன்

Sunil Narine 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா வென்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக மே 26ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதெராபாத் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஆரம்பத்திலேயே வெற்றியை கோட்டை விட்டது என்று சொல்லலாம்.

அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 24 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ரசல் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர் 51*, குர்பாஸ் 39 ரன்கள் விளாசி 10.3 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

பிறந்தநாள் பரிசு:
அதனால் 2012, 2014க்குப்பின் 3வது கோப்பையை வென்ற கொல்கத்தா அணி சென்னை மற்றும் மும்பைக்கு பின் 2வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்தது. மறுபுறம் போராடமலேயே தோல்வியை சந்தித்த ஹைதராபாத் 2வது கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. இந்த தொடரில் மொத்தம் 488 ரன்கள் மற்றும் 17 விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய சுனில் நரேன் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்நிலையில் சென்னையில் 2012இல் முதல் முறையாக கொல்கத்தா ஐபிஎல் கோப்பையை வென்ற உணர்வு தற்போது உள்ளதாக சுனில் நரேன் தெரிவித்துள்ளார். மேலும் தம்முடைய பிறந்தநாளில் 3வது ஐபிஎல் கோப்பையை வென்றது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கும் அவர் பேட்டிங்கில் முன்னேறுவதற்கு கௌதம் கம்பீர் நிறைய ஆதரவு கொடுத்ததாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இன்று மைதானத்திற்கு வரும் போது 2012 போன்ற உணர்வு ஏற்பட்டது”

- Advertisement -

“அது அற்புதமான உணர்வு. இதை விட சிறந்த பிறந்தநாள் பரிசை நான் கேட்க முடியாது. பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் ஆகிய அனைத்திலும் தற்போது என்னுடைய கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக நான் விளையாடுகிறேன். அது அணியின் வெற்றிக்காக உதவுகிறது. களத்திற்கு சென்று எனக்கு நானே சுதந்திரமாக விளையாடி அணிக்கு சரியான துவக்கத்தை கொடுப்பதே என்னுடைய பேட்டிங் வேலையாகும்”

இதையும் படிங்க: ஹாஸ்பிடலில் இருக்கும் என்னோட அம்மா சொன்ன வார்த்தையை காத்திட்டேன்.. 2 டைம் சாதிச்சுட்டேன்.. குர்பாஸ் நெகிழ்ச்சி

“அதற்கு கௌதம் கம்பீரிடமிருந்து ஆதரவு கிடைத்தது நன்றாக இருந்தது. இந்த சீசனில் அற்புதமாக விளையாடிய பில் சால்ட்டை தற்போது மிஸ் செய்கிறோம். அவருடைய வேலையை குர்பாஸ் பூர்த்தி செய்தார். அது போன்ற ஒரே மாதிரியாக சிந்திக்கும் ஓப்பனிங் பார்ட்னர்கள் உங்களுக்கு கிடைப்பது அணிக்கு நல்லது. நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை எடுப்பதால் எங்கள் ஸ்பின்னர்கள் வந்து பந்து வீசும் போது அழுத்தம் குறைவாகவே இருக்கும். விக்கெட்டுகளை எடுப்பதே சாவியாகும். அதுவே நாங்கள் சாம்பியன் பட்டம் வெல்ல உதவியது” என்று கூறினார்.

Advertisement