யுஸ்வேந்திர சாஹலின் பந்துவீச்சில் பெரிய குறை இருக்கிறது. அவர் வேண்டாம் – முன்னாள் வீரர் கருத்து

Chahal 1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2013-ம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி நடத்திவரும் எந்த கோப்பையையும் கைப்பற்ற வில்லை என்கிற காரணத்தினால் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chahal

- Advertisement -

கடந்த டிசம்பரில் நடைபெற்ற வாங்காதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினையும் பெற்றிருந்தார். அதேபோன்று தற்போது இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் அசத்தலாக பந்துவீசி வருகிறார்.

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் யுஸ்வேந்திர சாஹல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம்பெற்று வந்தாலும் தற்போது அவரது பார்ம் மோசமாக இருக்கிறது என்றும் பலரும் கருத்துக்களை கூறிவருகின்றனர்.

எனவே அவரை உலகக்கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்வதற்கு பதிலாக குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் சுனில் ஜோஷி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் இருந்து குல்தீப் யாதவை நீக்கிய பிறகு அவருடன் நான் நெருக்கமாக பணியாற்றியிருக்கிறேன். முன்பெல்லாம் கையை மெதுவாக சுழற்றும் அவர் தற்போது மிகவும் வேகமாக சுழற்றி வருக்கிறார்.

- Advertisement -

அதனால் அவரது பந்துவீச்சில் நல்ல ஸ்விங் இருக்கிறது. ஆனால் சாஹலை பொறுத்தவரை அவர் தற்போது சாதாரணமாக பந்து வீசுகிறார். அவரது பந்துவீச்சில் எந்த ஒரு ஸ்பின்னும் இல்லாமல் போய்விட்டது. அதனால் அவருடைய பந்துகளை எளிதாக அடிக்கவும் முடிகிறது. ஆனால் குல்தீப் யாதவை பொருத்தவரை அவர் மிகச் சிறப்பாக பந்தை சூழல விடுகிறார். அதனால் அவருக்கு தொடர்ச்சியாக விக்கெட்டுகளும் கிடைக்கிறது.

இதையும் படிங்க : சுப்மன் கில் சரிப்பட்டு வரமாட்டார், டி20 கிரிக்கெட்டில் மிரட்டும் அவருக்கு சான்ஸ் கொடுங்க – கம்பீர் ஓப்பன் டாக்

எனவே என்னை பொறுத்தவரை குல்தீப் தான் அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறுவேன். அதுமட்டும் இன்றி தற்போதெல்லாம் சாஹல் பந்தை சுழல விடாமல் மிகவும் பிளாட்டாக வீசி வருகிறார். அப்படி அவர் பந்து வீசுவதில் பெரிய தவறு உள்ளது. ஏனெனில் பந்து சுழலாமல் போகும் பட்சத்தில் அது பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக அடிக்கக்கூடிய வகையில் மாறும் என்றும் சுனில் ஜோஷி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement