புவனேஷ்வர் குமார் கட்டம் முடிஞ்சிடுச்சி. அவருக்கு பதிலா அணியில் இவரை சேருங்க – சுனில் கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கு பெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 2 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2 – 0* என தொடரில் பின்தங்கியதுடன் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது. ஏற்கனவே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பல தரமான வீரர்களை வைத்திருந்த போதிலும் பரிதாப தோல்வி அடைந்த இந்தியா இந்த ஒருநாள் தொடரிலும் அனுபவமில்லாத தென்னாபிரிக்காவிடம் மீண்டும் மண்ணைக்கவ்வியது.

kohli 1

- Advertisement -

டெஸ்ட் தொடரில் பெற்ற தோல்விக்கு ஒருநாள் தொடரை வென்று கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு இது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

புவனேஸ்வர் மோசமான பவுலிங்:
இந்த ஒருநாள் தொடரில் இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்டிங் மோசம் என பார்த்தால் இந்தியாவின் பௌலிங் அதைவிட மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் புவனேஸ்வர் குமார் முதல் 2 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.
முதல் போட்டியில் 64 ரன்களை வாரி வழங்கிய அவர் 2வது போட்டியில் 67 ரன்களை வழங்கினார். இப்படி மோசமாக பந்து வீசி வரும் புவனேஸ்வர் குமார் பற்றி இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Bhuvi

காலம் கடந்து விட்டார்:
இது பற்றி நேற்றைய 2-வது ஒருநாள் போட்டி முடிந்த பின் அவர் அளித்த ஒரு பேட்டியில், “இந்திய கிரிக்கெட்டில் புவனேஸ்வர் குமார் நிறைய பங்காற்றியுள்ளார். இருப்பினும் கடந்த சில வருடங்களாக ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் மோசமாக பந்து வீசி வருகிறார். அவரின் பந்துவீச்சு ஆரம்பத்திலும் சரியாக இல்லை இறுதியிலும் சரிவர அமையவில்லை. முன்பெல்லாம் மிகத்துல்லியமாக யார்க்கர் பந்துகளையும் மெதுவான பந்துகளையும் வீசும் அவரின் அந்த பந்துகள் இப்போது வேலை செய்வதில்லை.

- Advertisement -

எதிரணியினர் அவரின் பந்துவீச்சை கணித்து அடிக்கத் தொடங்கி விட்டதால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு பதில் மாற்று வீரரை பார்க்கும் நேரம் வந்துவிட்டது” என சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். ஒரு காலத்தில் புவனேஸ்வர் குமார் பவர் பிளே ஓவர்களில் ஸ்விங் பந்துகளையும் மிடில் ஓவர்களில் துல்லியமான பந்து வீச்சையும் இறுதிக் கட்ட ஓவர்களில் கச்சிதமான பந்துகளையும் வீசி எதிர் அணியை திணறடித்தார். ஆனால் தற்போது அவரின் பந்துகளை எதிரணியினர் கணித்து சரமாரியாக அடிக்க தொடங்கி விட்டார்கள்.

deepak

தீபக் சாஹர்:

- Advertisement -

“அனேகமாக தற்போது தீபக் சாஹருக்கு வாய்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன். புவனேஸ்வர் குமார் போலவே பந்துவீசும் திறமை கொண்ட அவர் இளமையானவராகவும் உள்ளார். மேலும் கீழ் வரிசையில் பேட்டிங் செய்யும் திறமையையும் கொண்டுள்ளார்” என இது பற்றி மேலும் தெரிவித்த சுனில் கவாஸ்கர் தடுமாறும் புவனேஷ்வர் குமாருக்கு பதில் தீபக் சஹாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : 3-வது ஒருநாள் போட்டி நடக்கும் கேப்டவுன் மைதானம் ஒரு பார்வை – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

மேலும் வரும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் உலககோப்பை நடைபெறுவதை கருத்தில் கொண்டு அதற்கு முன் தீபக் சஹருக்கு அதிகப்படியான வாய்ப்பளித்து உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு முக்கிய பந்துவீச்சாளராக வளர்க்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Advertisement