என்ன நடந்தாலும் 2011 முதல் அது மட்டும் மாறல, ரோஹித் சர்மாவை விமர்சிக்க – தோனியின் மோசமான சாதனையை கிண்டிய கவாஸ்கர்

Sunil Gavaskar
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கி புள்ளி பட்டியலிலுல் முதலிடம் பிடித்துள்ளது. இருப்பினும் 2023 உலக கோப்பைக்கு வரலாற்றில் முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறி மிகவும் பலவீனமான அணியாக மாறியுள்ள வெஸ்ட் இண்டீஸை அடித்து நொறுக்குவதில் என்ன வீரம் என்று இந்த வெற்றியைப் பற்றி இந்திய ரசிகர்களே கலாய்த்து வருகின்றனர்.

Jaiswal IND vs WI

- Advertisement -

குறிப்பாக 171 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வாலை பாராட்டும் ரசிகர்கள் சதமடித்து 103 ரன்கள் எடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவாயு அப்படியே நேர் மாறாக கிண்டலடித்து வருகிறார்கள். ஏனெனில் உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக சர்ச்சைக்குரிய முறையில் பதவி விலகிய விராட் கோலிக்கு பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றார் என்பதற்காக கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் வென்று தரவரிசையில் இந்தியாவின் நம்பர் ஒன் அணியாக முன்னேற்றினார்.

சாடிய கவாஸ்கர்:
ஆனாலும் அழுத்தமான 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை பதிவு செய்த அவரது தலைமையில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஃபைனலில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் முதலில் பேட்டிங் செய்யாத அவர் எதிரணி பேட்டிங் வரிசையில் 5 இடதுகை வீரர்கள் இருந்தும் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை தேர்ந்தெடுக்காமல் கழற்றி விட்டு சுமாராக கேப்டன்ஷிப் செய்து பேட்டிங்கிலும் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் சொதப்பியது தோல்விக்கு முக்கிய காரணமானது.

Dhoni test

அதனால் டி20 கிரிக்கெட்டில் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்குவதைப் போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோஹித்துக்கு பதில் புதிய கேப்டனை நியமித்து இளம் அணியை உருவாக்க வேண்டுமென ரசிகர்கள் விரும்புகின்றனர். முன்னதாக சுமாரான கேப்டன்ஷிப் காரணமாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்த போதும் டாஸ் வென்று முதலில் ஏன் பேட்டிங் செய்யவில்லை அஸ்வினை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பது போன்ற கேள்விகளை ரோகித் சர்மாவிடம் கேட்காமலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேப்டனாக நியமித்த தேர்வுக்குழுவை முன்னாள் வீரர் சுனில் காவாஸ்கர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தங்களது காலங்களில் கபில் தேவ் உட்பட யாராக இருந்தாலும் மிகப்பெரிய தோல்விகளை சந்திக்கும் போது அதற்கான கேள்விகள் கேட்கப்படும் என்று அவர் மீண்டும் விமர்சித்துள்ளார். ஆனால் இப்போதெல்லாம் அந்த நிலைமை தலைகீழாக மாறி ஒரு முறை கேப்டனாக அறிவிக்கப்பட்டால் பதவி விலகும் வரை அவரிடம் எவ்விதமான கேள்வியும் கேட்கப்படுவதில்லை என்று கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Gavaskar-and-Ashwin

குறிப்பாக 2011ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் தலா 4 – 0 (5) என்ற கணக்கில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் படுமோசமான தோல்வியை கேப்டனாக தோனி பதிவு செய்தும் பிசிசிஐ சார்பில் எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை. அந்த வகையில் அப்போதிலிருந்து இந்த நிலைமை இந்திய கிரிக்கெட்டில் தொடர்வதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்திய கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் வெற்றி பெற்றாலும் தோல்வியை சந்தித்தாலும் நாம் அந்த பதவியில் இருப்போம் என்பதை கேப்டன்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள்”

இதையும் படிங்க:ஓப்பனிங்கிலேயே நேபாளை அடித்த சாய் சுதர்சன், வளரும் ஆசிய கோப்பையில் இந்தியா செமி ஃபைனலுக்கு சென்றது எப்படி?

“சொல்லப்போனால் இந்த நிலைமை இப்போது மட்டுமல்ல நீண்ட காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக 2011இல் 0 – 4, 0 – 4 என்ற கணக்கில் அடுத்தடுத்த தொடர்களில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. ஆனாலும் கேப்டன் மாற்றப்படவில்லை” என்று கூறினார். முன்னதாக 2007 டி20 உலக கோப்பையை வென்று 2010இல் டெஸ்ட் தர வரிசையில் நம்பர் ஒன் அணியாக இந்தியாவை முன்னேற்றி 2011 உலக கோப்பையும் வென்ற காரணத்தால் அப்போதிருந்த பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் கேப்டன் தோனிக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்து விமர்சனங்கள் மற்றும் கேள்விகளை அடக்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement