ஐபிஎல் தொடரில் சொதப்பி அவங்க பெஞ்சில் இருந்தால் கூட பராவால்ல.. அதை செய்ங்க.. இந்திய அணிக்கு கவாஸ்கர் அட்வைஸ்

Sunil Gavaskar 6.jpeg
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதற்கு தயாராவதற்காக இந்திய அணி தங்களுடைய சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் 14 மாதங்கள் கழித்து விளையாட உள்ளனர்.

அதன் காரணமாக அந்த இருவருமே 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்தத் தொடருக்குப் பின் நேரடியாக ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியினர் விளையாட உள்ளனர். எனவே இந்த தொடரை விட ஐபிஎல் தொடரில் யார் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள் என்பதை வைத்தே உலகக் கோப்பை அணி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

கவாஸ்கர் ஆலோசனை:
அது போன்ற சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருப்பது அவசியமாகிறது. இந்நிலையில் ஒருவேளை ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டாலும் கூட அனுபவத்தில் உயர்ந்து நிற்கும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்து இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்போதிருக்கும் ஃபார்மை விட ஐபிஎல் ஃபார்ம் தான் முக்கியம் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் தொடர் நடைபெறும் நிலையில் உலகக் கோப்பை ஜூன் மாதம் நடைபெறுகிறது. எனவே மார்ச், ஏப்ரல் மாதம் நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களுக்கு முன்னுரிமை வாய்ப்பு வழங்கப்படலாம்”

- Advertisement -

“ஒருவேளை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஐபிஎல் தொடர் சுமாராக அமைந்தாலும் அவர்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அதே சமயம் அவர்கள் ரன்கள் அடிப்பார்கள். ஆனால் அனைவராலும் அனைத்து போட்டிகளிலும் ரன்கள் அடிக்க முடியாது. எனவே 14 போட்டிகளில் 5 போட்டிகளில் ஓரளவு நன்றாக செயல்பட்டாலும் அவர்களுடைய அனுபவத்தை மையப்படுத்தி நீங்கள் அவர்களை உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: டி20 மேட்ச்சை பொறுத்தவரை விராட் கோலிக்கு ஏற்ற இடம் அதுதான்.. அங்கதான் அவர் ஆடனும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

“ஒருவேளை நீங்கள் அவர்களை உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாவிட்டாலும் அணியில் எடுக்க வேண்டும். ஏனெனில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற அனுபவம் மிகுந்த வீரர்கள் அணியில் இருப்பது முக்கியமாகும். அவர்கள் பெவிலியனில் இருப்பதே இந்திய அணிக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கும்” என்று கூறினார்.

Advertisement