இவருடன் இருந்த 3 ஆண்டுகளில் நிறைய கற்றுக்கொண்டேன். என்மீது அதிக நம்பிக்கையும் வைத்துள்ளார் – மனம்திறந்த சுந்தர்

Sundar-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 28 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

RCBvsKKR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிவிலியர்ஸ் 33 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் கோலி 33 ரன்களுடனும் களத்தில் இருந்தார். துவக்க வீரர்களான பின்ச் மற்றும் படிக்கல் ஆகியோர் முறையே 47 மற்றும் 32 ரன்களை குவித்தனர் .அதன்பின்னர் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை மட்டுமே அடித்தது.

கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக தொடக்க வீரர் கில் 34 ரன்கள் அடித்தார். அவரை தவிர மற்றவர்கள் யாரும் 20 ரன்களை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க.து பெங்களூர் அணி சார்பாக வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசி நான்கு ஊர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், மோரிஸ் 4 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

rcb

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் : சாஹல் மற்றும் நான் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசினோம். இது போன்ற பெரிய வெற்றிகளில் என்னுடைய பங்களிப்பு இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தொடருக்கு முன்னால் நாங்கள் இந்த மைதானங்கள் குறித்து பேசிக் கொண்டோம். அதில் பாதி தொடரின்போது மைதானங்கள் அனைத்தும் ஸ்லோ டவுன் ஆகும்.

- Advertisement -

அப்போது சிறப்பாக பந்து வீச வேண்டும் என்று நானும் சாஹலும் பேசிக்கொண்டோம். ஒரு பந்து வீச்சாளராக எல்லா பந்துகளையும் சிறப்பாக வீசி விட முடியாது. அதனால் நான் ஒவ்வொரு பந்தையும் எனக்கு கிடைத்த சவாலாக எண்ணி வீசி வருகிறேன். நான் பந்துகளை விதவிதமாக வீச விரும்பவில்லை. பந்துகளை சரியான விதத்தில் கண்ட்ரோலாக வீச வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வீசி வருகிறேன். அந்த பலர் திட்டம் தற்போது சரியான பலனை அளித்து வருகிறது.

Sundar 1

இந்த மைதானத்தில் 160 ரன்கள் எடுத்தால் போதுமானது என்று நினைத்தோம். ஆனால் ஏபி டிவிலியர்ஸ் அதிரடியால் 30 ரன்கள் கூடுதலாக கிடைத்தது. நான் கோலியுடன் இணைந்து மூன்று வருடங்கள் ஆகிறது. அவருடன் கிடைத்த நட்பு மற்றும் அவரின் தலைமையின் கீழ் நான் கற்றுக் கொண்டது மிக அதிகம். பெங்களூரு அணியுடன் இணைந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி. இனிவரும் போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரின் இறுதி வரை நாங்கள் செல்வோம் என்று சுந்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement