இதுவரை விளையாடாமல் இருக்கும் 2 இந்திய வீரர்களுக்கு கடைசி போட்டியில் களமிறங்க வாய்ப்பு – விவரம் இதோ

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் நிறைவடைந்த வேளையில் இந்திய அணியானது மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் ஏற்கனவே இந்த தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை டிசம்பர் மூன்றாம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

ஏனெனில் முதல் நான்கு போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஏற்கனவே தொடரை கைப்பற்றிய காரணத்தினால் கடைசி போட்டியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் இரண்டு மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அனைவரும் ஒரு போட்டியிலாவது விளையாடி உள்ளனர்.

- Advertisement -

ஆனால் அதே வேளையில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் ஷிவம் துபே ஆகிய இருவருக்கு மட்டும் இடம் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் நாளைய போட்டியில் நிச்சயம் அவர்கள் இருவருக்கும் இடம் கிடைக்கும் என்றும் அவர்களுக்கு பதிலாக இரண்டு வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சூரியகுமார் மாதிரி அவரும் வரலாம்.. வெய்ட் பண்ணுங்க.. சொதப்பல் இளம் வீரருக்கு ஜாஹீர் கான் ஆதரவு

அந்த வகையில் நிச்சயம் நாளை போட்டியில் இந்த குறிப்பிட்ட இரண்டு மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணியானது தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement