Yuvraj Singh : அவர் ஓய்வை அனுபவிக்க வேண்டும் மகிழ்ச்சையாக இருங்கள் – பிராட் குறுந்தகவல்

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் இன்று தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் இன்று பத்திரிக்கை

- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் இன்று தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது : நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடி அது எனது அதிர்ஷ்டம்.

yuvraj 2

- Advertisement -

பல போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடி உள்ளேன். அதில் நிறைய போட்டிகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும் மறக்க முடியாத போட்டிகள் யாவும் இருக்கின்றன. அந்த வகையில் 2002ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பையின் இறுதி போட்டி என்னால் மறக்க முடியாத போட்டிகளாகும்.

இதுவரை என்னை ஆதரித்த எனது ரசிகர்களுக்கும் அணியில் எனது நெருங்கிய நண்பர்களான கம்பீர், சேவாக் மற்றும் ஜாகீர் கான் போன்ற வீரர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இவர்கள் மூவரும் எனது வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்கள். இதுநாள்வரை என்னை தேர்வு செய்து அணியில் விளையாடிய வைத்த போர்டே, ta சேகர் ஆகியோருக்கும் எனக்கு வாய்ப்பளித்த ஐபிஎல் உரிமையாளர்களுக்கும் நன்றி.

Yuvraj

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் யுவராஜ் சிங்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் குறிப்பிட்டதாக தகவலில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவராஜ் உடனான புகைப்படத்தை பகிர்ந்து அதில் ஓய்வை நிம்மதியாக அனுபவியுங்கள் என்ஜாய் லெஜண்ட் என்று இவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

broad

தனது ஓவரில் 6 சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்தாலும் அதனை மதித்து யுவராஜ் சிங்கிற்கு வாழ்த்துக்களை கூறி பிராட் பகிர்ந்த இந்த புகைப்படத்தை கண்ட யுவராஜன் ரசிகர்கள் யுவராஜ் சிங்கின் புகழை தங்களது கமெண்ட்டுகள் மற்றும் ஷேர்கள் மூலம் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement