மைதானத்தில் செருப்பு வீசியவர்களுக்கு ஜடேஜா கொடுத்த நெகிழ்ச்சியான பதில் !

Jadeja
- Advertisement -

நேற்றைய போட்டியின் போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காலணிகள் வீசப்பட்டதற்கு ஜடேஜா தற்போது டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.பல்வேறு போராட்டங்களை தாண்டியும் சென்னைசூப்பர்கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திட்டமிட்டபடி நடைபெற்றது.

Du-Plessis

- Advertisement -

சென்னை சூப்பர்கிங்ஸ்–கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி அபாரமாக விளையாடி வெற்றிபெற்றது.முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது.அந்த அணியில் அதிகபட்சமாக ஆன்ட்ரூ ரஸ்ஸல் 36 பந்துகளில் 11சிக்ஸர் உட்பட 1பவுண்டரிகளுடன் 88 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முன்னதாக இந்த போட்டியின் எட்டாவது ஓவரின் முதல் பந்து வீசப்பட்ட போது மைதானத்திற்குள் ரசிகர்களோடு ரசிகர்களாக மறைந்திருந்த நாம்தமிழர் கட்சியை சேர்ந்த ஒரு சிலர் மைதானத்தை நோக்கி செருப்பு மற்றும் ஷீ–க்களை வீசினர்.

- Advertisement -

ravinder jadeja

வீசப்பட்ட ஷீவை தனது கையால் எடுத்து ரசிகர்களை நோக்கி சோகம் தழும்பிய முகத்துடன் பார்த்தார் டூப்ளெசிஸ்.மற்றொரு செருப்பை ஜடேஜா கையால் அப்புறப்படுத்தினார்.இதனால் மைதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செருப்பு வீச்சின் காரணமாக போட்டி சிலநிமிடங்கள் தடைப்பட்டது. காலணி வீசியவர்களை உடனடியாக காவல்துறையினர் அப்புறப்படத்தினர். நேற்று நடந்த இந்த சம்பவம் குறித்து தற்போது சென்னை அணியின் ஜடேஜா டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

அவர் தனது டிவீட்டில் “நாங்கள் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ரசிகர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் இப்போதும் வைத்துள்ளோம்” என்றார்.

Advertisement